பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, March 25, 2020

மண்ணறை - 21

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 21 ]*

*மண்ணறை தண்டனைக்கான*
             *காரணங்கள் [ 04 ]*

*☄சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம்*
           *செய்யாமல் இருத்தல்☄*

*🏮🍂 மலமும்,சிறுநீரும் மனிதனின் உடம்பிலிருந்து வெளிப்படும் அசுத்தங்களாகும். ஆனால் மலம் கழித்தால் மக்கள் சுத்தம் செய்கிறார்கள். சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.*

*☄சிறுநீரை தூய்மையான தண்ணீரைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு தண்ணீர் கிடைத்தாலும் நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்கிற அளவிற்கு சிறுநீர் ஒன்றும் அசுத்தமில்லை என்று கருதுகிறார்கள்.*

*☄ஆனால் உண்மையில் மலத்திலிருந்து துர்வாடை கிளம்புவதுப் போல் சிறுநீரிலிருந்தும் துர்வாடை கிளம்புகிறது. மலத்தில் நோய் கிருமிகள் இருப்பது போல் சிறுநீரிலும் நோய் கிருமிகள் இருக்கிறது.*

*☄எனவே தான் இவ்விரண்டு அசுத்தங்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. சுத்தம் செய்யாவிட்டால் மண்ணறையில் தண்டனைக் கிடைக்கும் என்று எச்சரிக்கிறது. சிறுநீர் விஷயத்தில் மட்டுமில்லாமல் எல்லாக் காரியங்களிலும் நாம் சுத்தத்தைக் கடைபிடிக்க வேண்டும்.*

ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻗﺪاﻣﺔ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺟﺮﻳﺮ، ﻋﻦ ﻣﻨﺼﻮﺭ، ﻋﻦ ﻣﺠﺎﻫﺪ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻗﺎﻝ: ﻣﺮ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﺤﺎﺋﻂ ﻣﻦ ﺣﻴﻄﺎﻥ ﻣﻜﺔ ﺃﻭ اﻟﻤﺪﻳﻨﺔ ﺳﻤﻊ ﺻﻮﺕ ﺇﻧﺴﺎﻧﻴﻦ ﻳﻌﺬﺑﺎﻥ ﻓﻲ ﻗﺒﻮﺭﻫﻤﺎ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻳﻌﺬﺑﺎﻥ ﻭﻣﺎ ﻳﻌﺬﺑﺎﻥ ﻓﻲ ﻛﺒﻴﺮ» ، ﺛﻢ ﻗﺎﻝ: «ﺑﻠﻰ، ﻛﺎﻥ ﺃﺣﺪﻫﻤﺎ ﻻ ﻳﺴﺘﺒﺮﺉ ﻣﻦ ﺑﻮﻟﻪ، ﻭﻛﺎﻥ اﻵﺧﺮ ﻳﻤﺸﻲ ﺑﺎﻟﻨﻤﻴﻤﺔ» ، ﺛﻢ ﺩﻋﺎ ﺑﺠﺮﻳﺪﺓ ﻓﻜﺴﺮﻫﺎ ﻛﺴﺮﺗﻴﻦ، ﻓﻮﺿﻊ ﻋﻠﻰ ﻛﻞ ﻗﺒﺮ ﻣﻨﻬﻤﺎ ﻛﺴﺮﺓ، ﻓﻘﻴﻞ ﻟﻪ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻟﻢ ﻓﻌﻠﺖ ﻫﺬا؟ ﻗﺎﻝ: «ﻟﻌﻠﻪ ﺃﻥ ﻳﺨﻔﻒ ﻋﻨﻬﻤﺎ ﻣﺎ ﻟﻢ ﻳﻴﺒﺴﺎ ﺃﻭ ﺇﻟﻰ ﺃﻥ ﻳﻴﺒﺴﺎ»*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றார்கள். அப்போது (கப்ரில் உள்ள) இவ்விருவரும் வேதணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பாவத்திற்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. அவர்களில் ஒருவர் சிறுநீர் கழித்து விட்டு தூய்மை செய்துக் கொள்ளாதவராக இருந்தார். மற்றவர் கோல் சொல்லி நடப்பவராக இருந்தார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)*

*📚 நூல் : நஸாயி (2042) 📚*

 _*عَنْ أَبِي هُرَيْرَةَ،  قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ ‏"*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை வேதணையில் அதிகமானது சிறுநீர் (கழித்து விட்டு சுத்தம் செய்யாமல்) இருப்பதால் ஏற்படுகிறது.*_

*🎙அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல் இப்னுமாஜா (342) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment