பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, July 30, 2020

இஸ்லாத்தை அறிந்து - 50

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 50  👈👈👈* 


 *📚📚📚  தலைப்பு 4. சர்ச்சைக்குரிய🕋 ஹதீஸ்கள்📚📚📚* 


 *☪️☪️☪️18. அபூபக்ர் 🕋ஈமானும்🌐 உலக மக்கள் 🚨ஈமானும்☪️☪️☪️*


 *🌐அபூபக்ர் ஈமானும் உலக மக்கள் ஈமானும்🌐*


 *அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானும் உலக மக்களின் ஈமானும்* 

ثنا محمد بن أحمد بن بخيت ثنا أحمد بن عبد الخالق الضبعي ثنا عبد الله بن عبد العزيز بن أبي رواد أخبرني أبي عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لو وزن إيمان أبي بكر بإيمان أهل الأرض لرجح – الكامل في ضعفاء الرجال ـ موافق للمطبوع – *(4 ஃ 201* )


 *✍️✍️✍️அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானையும் பூமியிலுள்ளவர்களின் ஈமானையும் நிறுக்கப்பட்டால் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானே மேலேங்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அல்காமில்- இப்னு அதீ, பாகம் : 4. பக்கம் : 201)* 

 *இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் பலவீனமானவர். நபிகளார் கூறியதாக இக்கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.* 


 *☪️அபூபக்ர் (ரலி) அவர்களின் தர்மம்☪️*


அபூபக்ர் (ரலி) அவர்களின் தர்மம்

 *3608*  حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ قَال سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ عِنْدِي مَالًا فَقُلْتُ الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا قَالَ فَجِئْتُ بِنِصْفِ مَالِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ قُلْتُ مِثْلَهُ وَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ فَقَالَ يَا أَبَا بَكْرٍ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ قَالَ أَبْقَيْتُ لَهُمْ اللَّهَ وَرَسُولَهُ قُلْتُ وَاللَّهِ لَا أَسْبِقُهُ إِلَى شَيْءٍ أَبَدًا قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي

 *✍️✍️✍️நபி (ஸல்) அவர்கள், தர்மம் செய்யவேண்டும் என்று எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அந்நேரத்தில் செல்வம் என்னிடம் இருந்தது. இன்றைய தினம் நான் அபூபக்ரை முந்திவிட்டால் அவரை நான் முந்திவிடுவேன் என்று கூறிக்கொண்டேன். நான், என் செல்வத்தில் பாதியை கொண்டு சென்றேன். அப்போது நபிகளார், நீ உன் குடும்பத்தாருக்காக எவ்வளவு வைத்துள்ளீர் என்று கேட்டார்கள். இதைப் போன்றளவு என்று கூறினேன். அபூபக்ர் அவரிடமிருந்த அனைத்தையும் கொண்டு வந்தார். நபிகளார் அவரிடம், நீர் குடும்பத்தாருக்கு எவ்வளவு மீதம் வைத்துள்ளீர் என்று கேட்டார்கள். அல்லாஹ்வையும் அவன் தூதரையும் வைத்துள்ளேன் என்றார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை ஒரு போதும் எதிலும் முந்த முடியாது என்று கூறினேன்.✍️✍️✍️* 

அறிவிப்பவர்: உமர் (ரலி),

 *நூல்கள் : திர்மிதீ (3608), அபூதாவூத் (1429), தாரமீ(1601), ஹாகிம் (1442), பைஹகீ (7313), முஸ்னத் அப்து பின் ஹுமைத் (14), பஸ்ஸார் (269)* 


 *இந்த செய்தி இடம் பெறும் அனைத்து நூல்களில் ஹிஷாம் பின் ஸஅத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.* 

 *✍️✍️பஸ்ஸாரின் (169) இன்னொரு அறிவிப்பில் இவரல்லாதவர் இடம் பெறும் செய்தி உள்ளது. என்றாலும் அதில் அப்துல்லாஹ் பின் உமர் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார் இவரும் பலவீனமானவராவார்✍️✍️.* 


 *📚📚பொறாமை நன்மைகளை அழித்துவிடும்📚📚*


பொறாமை நன்மைகளை அழித்துவிடும்

 *4200* حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ وَأَحْمَدُ بْنُ الْأَزْهَر قَالَا حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ عَنْ عِيسَى بْنِ أَبِي عِيسَى الْحَنَّاطِ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْحَسَدُ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ وَالصَّلَاةُ نُورُ الْمُؤْمِنِ وَالصِّيَامُ جُنَّةٌ مِنْ النَّارِ رواه ابن ماجة

 *✍️✍️விறகை நெருப்பு திண்டுவிடுவதைப் போல் பொறாமை நன்மைகளை திண்டுவிடும். நெருப்பை தண்ணீர் அணைத்தவிடுவதைப் போல் தர்மம் பாவங்களை அழித்துவிடும். தொழுகை முஃமின்களின் ஒளியாகும். நோன்பு நரகத்தை காக்கும் கேடயமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍️✍️.* 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

 *நூல் : இப்னுமாஜா (4200), அபூதாவூத் (4257), பஸ்ஸார் (6212, 8412), முஸ்னத் அபீ யஃலா (3656), ஹாகிம் (1430), முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (26053) இப்னுமாஜா, பஸ்ஸார் ஆகிய நூல்களில் ஈஸா பின் அபீ ஈஸா அல்ஹன்னாத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பொய் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர் ஆவார்.* 

 *✍️அபூதாவூத், ஹாகிம் ஆகிய நூல்களில் இப்ராஹீம் பின் அபீ உஸைதின் பாட்டனார் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.✍️* 

இப்னு அபீஷைபா என்ற நூலில் யஸீத் அர்ராஸியீ என்ற பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார்.


 *☪️திருமணத்தை பிரகடனப்படுத்துங்கள்☪️*

திருமணத்தை பிரகடனப்படுத்துங்கள்

 *1009* حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الْأَنْصَارِيُّ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ فِي هَذَا الْبَابِ وَعِيسَى بْنُ مَيْمُونٍ الْأَنْصَارِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَعِيسَى بْنُ مَيْمُونٍ الَّذِي يَرْوِي عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ التَّفْسِيرَ هُوَ ثِقَةٌ رواه الترمذي

 *✍️திருணமத்தை பகிரங்கப்படுத்துங்கள், அதை பள்ளிவாசலில் வைத்து நடத்துங்கள், அதில் தஃப் (கொட்டு) அடியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️* 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

 *நூல்கள் : திர்மிதீ (1009), இப்னுமாஜா (1885), இப்னுஹிப்பான் (4066), முஸ்னத் பஸ்ஸார் (2214), பைஹகீ (15082, 15093), ஹாகிம் (2718), தப்ரானீ-கபீர், பாகம் :18, பக்கம் :362, தப்ரானீ-அவ்ஸத். பாகம் :5, பக்கம் : 222, ஸுனனுஸ் ஸுக்ரா- பைஹகீ- (2014) திர்மிதீ, பைஹகீ (15093) ஆகிய நூல்களில் ஈஸா பின் மைமூன் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவராவார்.* 

 *✍️இப்னுஹிப்பான், பஸ்ஸார், பைஹகீ(15082), ஹாகிம், தப்ரானி-கபீர், அவ்ஸத், இமாம் பைஹகீயின் ஸுனனுஸ் ஸுக்ரா ஆகிய நூல்களில் அப்துல்லாஹ் பின் அஸ்வத் என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.✍️* 


 *இப்னுமாஜா என்ற நூலில் காலித் பின் இல்யாஸ் என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.* 


 *🕋ஜும்மாவில் ஒரு நேரம் இருக்கிறது🕋*


 *✍️✍️கேள்வி : வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபியவர்கள் கூறிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான். எனினும், அந்த நேரம் எது என்று தெளிவு படுத்தப்படவில்லை என்று ஆரம்பத்தில் கூறி வந்தோம். ஆனால் அநத நேரம் அத்தஹியாத்து நேரம் என்று தற்போது ஹதீஸ்களின் மூலம் தெரியவருகிறது.✍️✍️* 

 *விளக்கம்* 

 *1409* و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ح و حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا مَخْرَمَةُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه ُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاة رواه مسلم

 *✍️✍️அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் :என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் ; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அது, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.✍️✍️* 

 *முஸ்லிம் (1546)* 

 *✍️இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று இந்த ஹதீஸில் உள்ளது✍️.* 

 *இமாம் அமர்வது என்பது மிம்பரில் ஏறியவுடன் இமாம் அமர்வதைக்* *குறிக்கிறது? அல்லது இரண்டு குத்பாக்களுக்கு* *இடையே அமர்வதைக் குறிக்கிறதா? அல்லது அத்தஹிய்யாத்தில் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா என்பதை நாம் ஆய்வு செய்து* *சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும்.* 

 *✍️✍️✍️இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் பாங்கு சொல்லப்படும். அப்போது துஆ செய்ய கூடாது; பாங்குக்குத் தான் பதில் கூற வேண்டும். அதன்பின் உரை ஆரம்பமாகும். அப்போது உரையைக் கேட்க வேண்டுமே தவிர துஆ செய்து கொண்டிருக்கக் கூடாது. அதன் பின் தொழுகை ஆரம்பமாகி விடும். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யும் நேரம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்காது. அபூஹுரைரா (ர-லி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் “அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்-லிலிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.*✍️✍️✍️* 

 *அவற்றில் குதைபா அவர்களது அறிவிப்பில் “அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.* 

 *நூல் : முஸ்லிம் (1543)* 

 *✍️துஆ ஏற்கப்படும் அந்த நேரம் தொழுகைக்குள் தான் உள்ளது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. தொழுகையில் துஆ செய்யும் நேரங்கள் இரண்டு உள்ளன.✍️* 

 **ஒன்று சஜ்தா செய்யும் போது துஆ செய்தல். மற்றொன்று அத்தஹிய்யாத்தில்* *துஆ செய்தல். இமாம் அமர்ந்த்து முதல் என்ற ஹதீஸுடன் இந்த* *ஹதீஸை இணைத்துப் பார்க்கும் போது சஜ்தாவை இது குறிக்காது என்று தெரிகிறது.* *இருப்புக்குப் பின் சஜ்தா இல்லை. சஜ்தாவுக்குப் பின்னர் தான் இமாம் இருப்புக்கு வருவார். எனவே* *அத்தஹிய்யாத்தில் அமர்வதைத் தான் இது கூறுகிறது என்பது உறுதியாகிறது.** 

 *புகாரி 935, 5295, 6400 ஆகிய ஹதீஸ்களில் நின்று தொழும் போது என்ற வாசகம் உள்ளது.* 

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا رواه البخاري

 *✍️✍️✍️அபூஹுரைரா (ர-லி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்üக்கிழமை (ஜுமுஆ நாள்) பற்றிக் குறிப்பிடுகையில், “ஜுமுஆ நாüல் ஒரு நேரம் இருக்கின்றது; அந்த நேரத்தை ஒரு முஸ்-லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. அ(ந்த நேரத்)தைப் பற்றிக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்.✍️✍️✍️* 

 *நூல் : புகாரி (935)* 

 *நின்று தொழும் போது என்று இதில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்படத் தேவை இல்லை* .

 *✍️✍️இது தொழுகையில் நிற்கும் நிலையைக் குறிக்காது. ஏனெனில் நிற்கும் நிலையில் துஆ ஏதும் இல்லை. அது துஆ செய்வதற்கான நேரமும் அல்ல. நிற்குதல் என்பது வணங்குதல் என்ற கருத்திலும் ஏராளமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. தொழுது வணங்கும் போது அடியான் துஆ செய்தால் அது ஏற்கப்படும் என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.✍️✍️* 

 *தொழுது வணங்கும் போது இமாம் அமர்ந்த பின்னர் துஆ செய்யும் இடம் ஒன்றே ஒன்று தான் உள்ளது. அது அத்தஹிய்யாத் அமர்வுதான். அதில் ஜும்மாவில் அத்தஹிய்யாத் அமர்வில் சிறிய நேரம் உள்ளது. அந்த நேரத்தில் நமது துஆ அமைந்து விட்டால் அது கட்டாயம் ஏற்கப்படும் என்று கருத்துக் கொள்வது தான் அனைத்து ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் முடிவாகும்* 

 *✍️✍️சஹீஹ் இப்னி ஹுஸைமாவில் இதே செய்தி இடம்பெற்றுள்ளது. அதில் இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று கூறப்பட்டுள்ளது✍️✍️.* 

இந்த அறிவிப்பு சரியான அறிவிப்பு இல்லை.

صحيح ابن خزيمة – (3 / 120) *1739* – أنا أبو طاهر نا أبو بكر نا أحمد بن عبد الرحمن بن وهب نا عمي أخبرني مخرمة عن أبيه عن أبي بردة بن أبي موسى الأشعري قال : قال لي عبد الله بن عمر أسمعت أباك يحدث عن رسول الله صلى الله عليه و سلم في شأن ساعة الجمعة ؟ قال : قلت نعم سمعته يقول : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : هي ما بين أن يجلس الإمام على المنبر إلى أن تقضى الصلاة

 *✍️✍️இதில் அஹ்மது பின் அப்திர் ரஹ்மான் பின் வஹப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். எனவே மனனத் தன்மை பாதிப்புக்குள்ளான இவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்கக்கூடாது.✍️✍️* 

 **குறிப்பு : இதற்கு முன்னர் அந்த நேரம் எது என்று தெளிவுபடுத்தப்பட்டவில்லை என்று நாம்* *சொல்லி இருக்கிறோம். அந்தக் கருத்தில் இருந்து நாம்* *விலகிக்கொள்கிறோம் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம்.** 


 *☪️இரண்டை விட்டுச் செல்கிறேன்☪️*

 *✍️✍️✍️இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்தி எது என்பதை அறிந்து அதைத்­ தவிர்த்துவிட்டு சரியான செய்திகளையே நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டு­ம்.✍️✍️✍️* 

 *அறிவிப்பு : 1* 

 *மாலிக் அவர்கள் தொகுத்த ஹதீஸ் நூலான முவத்தா என்ற நூலில் பின்வரும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.* 

 *1395* و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ رواه مالك في الموطأ

 *✍️நான் உங்களிடம் இரண்டை விட்டுச் சொல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்).2. அவனுடைய நபியின் வழிமுறைகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍️* .

 *நூல் : முஅத்தா (1395)* 

 *இந்தச் செய்தியை அறிவிக்கும் மாலிக் அவர்கள் நபிகளார் கூறியதாக நேரடியாக அறிவிக்கிறார்கள். இவர் நபித்தோழர்* *அல்லர் . மாறாக தபஉத் தாபியீன்களில் உள்ளவராவார். அதாவது நபிகளாருக்குப் பின் இரண்டு* *தலைமுறைக்குப் பிறகு வந்தவர்.மாலிக் அவர்களுக்கும் நபிகளாருக்கும் இடையில் குறைந்த பட்சம் இரண்டு* *அறிவிப்பாளர்கள் இருக்க வேண்டும். அந்த இருவர் யார் என்ற விபரம் இல்லை என்பதால் இந்தச் செய்தி முஃளல் என்ற வகையைச் சார்ந்த தொடர்பு அறுந்த* *செய்தியாகும். இதன் காரணத்தால் இந்தத் தொடர் பலவீனமானதாக உள்ளது.* 

 *அறிவிப்பு : 2* 

 *✍️✍️இதே செய்தி இப்னு அப்தில் பர் அவர்களின் ஜாமிவு பயானில் இல்மி வ ஃபழ்லிஹி என்ற நூலில் முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இந்தத் தொடர் கூறுகின்றது✍️✍️.* 

جامع بيان العلم وفضله – مؤسسة الريان – *(2 / 55(724-* حدثنا سعيد بن عثمان، قال: حدثنا أحمد بن دحيم، قال: حدثنا محمد بن إبراهيم الدؤلي، قال: حدثنا علي بن زيد الفرائضي، قال: حدثنا الحنيني، عن كثير بن عبد الله بن عمرو بن عوف، عن أبيه، عن جده، قال: قال رسول الله, صلى الله عليه وسلم: “تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة نبيه, صلى الله عليه وسلم”.

 *அறிவிப்பவர் : அவ்ப் பின் மாலிக் (ரலி) நூல் : ஜாமிஉ பயானில் இல்மி வபள்லிஹி (பாகம் 2 : பக்கம் : 55)* 

 *✍️✍️இதில் இடம்பெறும் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்களாவர். இரண்டாவது அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஃப் என்பவரை இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கவில்லை. இப்னு ஹிப்பான் எந்தக் குறையும் சொல்லப்படாத யாரெனத் தெரியாதவரை நம்பக்கமானவர் பட்டியலில் இணைக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் இதை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. மூன்றாவது அறிவிப்பாளர் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் துறை சார்ந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். சிலர் இவரை பொய்யர் என்றும் கூறியுள்ளார்கள்✍️✍️.* 

 *இது போன்ற ஏராளமான அறிவிப்புகள் இருந்தாலும், அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன.* 


 *🕋🕋19. குபா 🕋பள்ளியில் 📚தொழுவது 🕋உம்ரா📚 போன்றதா❓🕋🕋*

 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 51* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment