பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, June 8, 2020

தலாக்🧕 விடப்பட்டவளிடம்🛑 அன்பளிப்பைத்🟣 திரும்பக்🔵 கேட்கலாமா❓

*🌐மீள் 🌐பதிவு🌐* 



*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🧕தலாக்🧕 விடப்பட்டவளிடம்🛑 அன்பளிப்பைத்🟣 திரும்பக்🔵 கேட்கலாமா❓🟤*


ஒருவன் மனைவியுடன் சேர்ந்து வாழும்போது கொடுத்த அன்பளிப்புகளை விவாகரத்தின் போதோ, அதன் பின்போ திரும்பப் பெறக்கூடாது.

அன்பளிப்பாக கொடுத்த பொருட்களை திரும்பப் பெறுவது அநாகரீகமான செயல் எனவும் அது கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

 *3072* حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يُعْطِيَ عَطِيَّةً أَوْ يَهَبَ هِبَةً فَيَرْجِعَ فِيهَا إِلَّا الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ وَمَثَلُ الَّذِي يُعْطِي الْعَطِيَّةَ ثُمَّ يَرْجِعُ فِيهَا كَمَثَلِ الْكَلْبِ يَأْكُلُ فَإِذَا شَبِعَ قَاءَ ثُمَّ عَادَ فِي قَيْئِه رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அன்பளிப்பு ஒன்றை வழங்கிவிட்டு அதைத் திரும்பப் பெறுவது யாருக்கும் ஆகுமானதல்ல. தந்தை தன் பிள்ளைக்கு வழங்கியதைத் தவிர. கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் நாயைப் போன்றவராவார். நாய் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுக்கின்றது. பிறகு அந்த வாந்தியை மறுபடியும் உண்ணுகிறது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

 *நூல் : அபூதாவூத் 3072* 

 *2589* حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

 *நூல் : புகாரி 2589* 


எனவே கணவன் மனைவிக்கு கொடுத்த அன்பளிப்புகளை விவாகரத்தின் போது திரும்பக் கேட்கக்கூடாது.

மனைவிக்குக் கொடுக்கும் பொருட்கள் நமக்குரியது தான் என்ற எண்ணத்தில் இன்றைக்குப் பல கணவன்மார்கள் மனைவிக்கு நகைகளைச் செய்து கொடுக்கின்றனர். அவர்கள் பெயரில் சொத்துக்களையும் வாங்கிப் போடுகின்றனர். ஆனால் திருமண உறவு இரத்த சம்மந்தம் போன்ற உறவு அல்ல. ஒரு நாள் அந்த உறவு முறிந்து போக வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனைவிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தவை விவாகரத்து ஏற்பட்டால் நமக்குக் கிடைக்காது என்பதை விளங்கித் தான் அன்பளிப்புகளைக் கொடுக்க வேண்டும்.

தனது சேமிப்புக்கும், தனது எதிர்காலத்துக்கும் உதவும் என்பதற்காக நகைகளை வாங்கினால் அதை மனைவியிடம் கொடுக்கும் போது தெளிவாகச் சொல்லி விட வேண்டும். இது எனக்குரியதுதான். நீ பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர உனக்குரியதாகக் கருதக் கூடாது என்று தெளிவாகச் சொல்லி விடவேண்டும். இதற்கு இரண்டு சாட்சிகளையும் வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது எழுதிக் கொள்ள வேண்டும்.

நம்முடைய ஜமாஅத்தில் குடும்பப் பஞ்சாயத்தின் போது அனைத்தையும் மனைவியின் பெயரில் எழுதி வைத்து விட்டு பரிதாபமாக கண்ணீர் விடும் பல அப்பாவி ஆண்களைப் பார்த்துள்ளோம். அதன் விளைவாகவே இதை இங்கு குறிப்பிடுகிறோம்.

விவாகரத்து நடந்தாலும் இது மனைவிக்கு உரியது தான் என்று நீங்கள் நினைப்பதை மட்டும் அன்பளிப்பாகக் கொடுங்கள்.

அப்படிக் கொடுத்த பின்னர் அதை எக்காரணத்தினாலும் உரிமை அடிப்படையில் திரும்பக் கேட்க முடியாது. சில நெருக்கடிகள் வரும் போது மனைவியிடம் கேட்டு அவரும் மனப்பூர்வமாக திருப்பித் தந்தால் அது குற்றமாகாது. உரிமை கொண்டாடும் வகையில் கேட்டால் அது குற்றமாகும்.


அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன் 


 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment