பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, August 11, 2019

குலப்பவாதிகள் யார்

*👹👹மீள் பதிவு👹👹*

*🌐🌐குலப்பவாதிகள் யார்❓🌐🌐*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚📚📚 ஆதாரப்பூர்வமான ஹதீஸ் வழியில் ஒரு பார்வை📚📚📚*

*👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈*

*🌹🌹🌹அவுஜுபில்லாஹி மினஷ்👹ஷைத்தானிர்ரஜீம்பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்🌹🌹🌹*

*👉👉👉அல்லாஹ்வுக்கு அஞ்சாத உள்ளங்கள்!👇👇👇*

*👉👉👉(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)👈👈👈*

*✍✍✍இன்றைய தினம் நாம் ஏக இறைவனை ஏற்ற முஸ்லிம்களாக வாழ்ந்து வருகிறோம் ஆனால் நாம் உத்தம நபிமார்களைப் போன்றும் சத்திய சஹாபாக்களைப் போன்றும் மிகவும் கஷ்டப்பட்டோ, சிரமமங்களை சுமந்தோ இஸ்லாத்தில் ஏற்கவில்லை அவர்களைப் போன்று கஷ்டங்களையும் சிரமமங்களையும் அடைந்திருந்தால் நாம் இன்று இறையச்சத்தை மறந்திருப்போமா❓ அல்லது மார்க்கத்தின் வரம்புகளையாவது மீறியிருப்போமா❓✍✍✍*

📕📕📕ஏதோ நம் மூதாதையரும் பெற்ற தாய் தந்தையும் கப்ருவணங்கிகளாக இருந்து ஓரளவுக்கு குர்ஆனை ஓதியும் தொழுதும் வந்ததன் வாயிலாக அவர்களின் சந்ததிகளாக நம்மில் 75 சதவீதம் பேர் முஸ்லிம்களாகவும் அதில் குர்ஆன் மற்றும் நபிமொழியை அறிந்தவர்களாக 30 சதவீதம் பேர் ஏகத்துவவாதிகளாக வாழ்ந்து வருகிறோம்! எந்த ஒன்றும் சிரமம் இல்லாமல் கிடைத்தால் அந்த கிடைக்கும் பொருளுக்கு மதிப்பு குறைவாகவே தென்படும் அதுபோலத்தான் இஸ்லாத்தை சிரமமப் படாமல் பெற்றதன் காரணமாக நம்மில் பலருக்கு இஸ்லாம் ஒரு கேளிக்கை சாதனமாகவும் ஒரு விளையாட்டு பொருளாகவும் தென்படுகிறது இறையச்சம் மட்டும் இருந்திருந்தால் இவ்வாறு நாம் செய்வோமா❓📕📕📕

*🧕🧕🧕மர்யம் (அலை) ஓர் படிப்பினை🧕🧕🧕*

*✍✍✍குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்பட்ட ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைப் போன்று உங்களால் இறையச்சத்தை ஏற்க இயலவில்லை.*
*ஒரு கன்னிப் பெண்ணாக இருந்து திருமணத்தை நெருங்காத நிலையில் இறைவன் இந்தப் பெண்மணிக்கு குழந்தையை அருளப் போவதாக நற்செய்தி அறிவிக்கிறான். இதோ அதற்குரிய ஆதாரங்கள்!✍✍✍👇👇👇👇👇*

📘📘📘“நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்’ என்று அவர் கூறினார்.📘📘📘

*(அருள்மறைகுர்ஆன்  19:19)*

*✍✍✍“எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?” என்று (மர்யம்) கேட்டார்.✍✍✍*

*(அருள்மறை குர்ஆன்  19:20)*

📙📙📙“அப்படித்தான்” என்று (இறைவன்) கூறினான். “இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை எனவும் உமது இறைவன் கூறினான்” (என்று ஜிப்ரீல் கூறினார்.)📙📙📙

*(அருள்மறை குர்ஆன்  19:21)*

*✍✍✍அன்னை மர்யம் (அலை) நாடியிருந்தால் இச்செய்தியை அறிந்து தற்கொலை செய்திருக்கலாம் அல்லது ஊரைவிட்டு எங்கேயாவது கண்கானாத தூர தேசத்திற்கு ஓடிப் போய் சாகும் வரை மறைந்து வாழ்ந்திருக்கலாம் அப்படிப்பட்ட மனதை வருத்தக்கூடிய நற்செய்தியை அவர் அடைந்திருந்தார் இப்படிப்பட்ட மனதை வாட்டக்கூடிய சம்பவத்தை தன் வாழ்நாளில் என்றைக்காவது நாம் அடைந்திருப்போமா❓ அவ்வாறு அடைந்திருந்தால் மார்க்கத்தை கேளிக்குரியதாக கருதியிருப்போமா ஏனெனில் நாம் இந்த இஸ்லாத்தை இலகுவாக ஏற்றுள்ளோம்!✍✍✍*

*🌐🌐🌐இறையச்சம் என்றால் என்ன❓🌎🌎🌎*

📗📗📗📗இறையச்சம் என்பது ஒருவகை அச்ச உணர்வு ஆகும் அதாவது அல்லாஹ் நம்மை கண்காணிக்கிறான் தவறான ஒரு சொல் அல்லது செயல் செய்துவிட்டால் அவன் நம்மை மறுமையில் தண்டிப்பான் என்று உணர வேண்டும்
தொழுகையில் தொழும்போது அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நிற்பதைப் போன்று உணர வேண்டும் அல்லாஹ் நம்மை பார்ப்பதைப் போன்று உணர வேண்டும் இப்படியான இறையச்சம் இறைவன் மீது உள்ள அன்பின் வெளிப்பாடாகும் இறைவனை எவர் நேசிக்கிறாரோ அவரே இறைவனின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அவனுக்கு கீழ்ப்படிந்தவராக இறையச்சம் கொண்டு அஞ்சுவார்!
(நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்? என்று வினவப்பட்டது. நபி  (ஸல்) அவர்கள், ” மனிதர்களிலேயே (அல்லாஹ்வை) அதிகம் அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள்.📗📗📗

*அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)* *அவர்கள். நூல் புஹாரி. 3353*

*🌹🌹🌹அல்லாஹ்வை அஞ்சுவது எவ்வாறு❓🌹🌹🌹*

*✍✍✍உலக விஷயத்திலும் மார்க்க விஷயத்திலும் அல்லாஹ் ஒன்றைப் பற்றி இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்ற கட்டளையிட்டுவிட்டால் அந்த கட்டளையை முறையாக பின்பற்றி வாழக்கூடியவர்களாக இருப்பவர்களே இறையச்சவாதிகள் அவ்வாறு அல்லாஹ் அறிவிக்கும் இறைச் சட்டங்களை நபிமார்களின் வாயிலாக நாம் அறிந்து வைத்துள்ளோம் அதற்குரிய அத்தாட்சியாக இதோ ஒரு அழகிய குர்ஆன் வசனத்தை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்!✍✍✍*

📒📒📒நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்.📒📒📒

*(குர்ஆன் 33:45, 46)*

*👆👆👆✍✍✍மேற்கண்ட அருள்மறை குர்ஆன் வசனத்தில் நபிமார்களை சாட்சிகளாக அல்லாஹ் அருளியதாக வர்ணிக்கிறான் அதிலும் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களை ஒளிவீசும் விளக்காக அனுப்பியாக அழகான வார்த்தையை அருளியிருக்கிறான் ஆனால் இதன் அர்த்தம் என்ன❓✍✍✍*

*🏵🏵🏵ஒளிவீசும் விளக்காக!🏵🏵🏵*

📓📓📓நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ஒளிவீசும் விளக்காக வர்ணித்துள்ளதை சிந்திக்கமாட்டீர்களா❓ ஆம் நாம் குஃப்ரு எனும் இறை நிராகரிப்பு மற்றும் ஷிர்க் எனும் இணைவைப்பு இருளில் மூழ்கியிருக்கும் போது அந்த இருளுக்கு இடையே அறிவைக் கொடுத்து அதற்குரிய குர்ஆன் வஹியை நம்மிடம் சேர்ப்பிக்க தன் திருத்தூதரை இறைவன் அருளியுள்ளான் இன்று வரை அந்த குர்ஆன் எனும் வஹி ஒளிவீசிக் கொண்டே இருக்கிறது அந்த ஒளிக்குரிய விளக்காக நபிமார்களின் முத்திரையும் இறுதி நபியுமாகிய முஹம்மது (ஸல்) திகழ்கிறார்கள் இதுவே ஒளிவீசும் விளக்கு என்பதற்குரிய விளக்கமாகும்.
நபியே (முஹம்மதே!)
உம்மை சாட்சியாகவும்,
நற்செய்தி கூறுபவராகவும்,
எச்சரிக்கை செய்பவராகவும்,
அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும்
ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்.
இத்தனை ஆதாரங்களை நாம் பெற்றிருந்தும் முஸ்லிம்களாக தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தை ஏற்றும் முட்டாள்களாக மூடர்களாக வாழ்வதுதான் கொடுமையிலும் கொடுமை அப்படிப்பட்ட கொடுமையைத்தான் நாம் இங்கு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.📓📓📓

*📚📚📚மார்க்கத்தில் 🌙🌙🌙பிறை🌙🌙🌙 குழப்பம் (ஃபித்னாக்கள்)📚📚📚*

*✍✍✍முஸ்லிம்களாக ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு வாழ்கின்ற நாம் மார்க்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டே பெருநாட்களை அடைகிறோம் அந்த பெருநாட்களை அடைவதற்கு ஆயிரத்து எட்டு வியாக்கியானங்களை கற்பித்து பிறை விஷயத்தில் தானும் குழம்பி தம்மை நம்பியவர்களையும் குழப்பி தானும் வழிகெட்டு தன்னை நம்பியவர்களையும் வழிகெடுத்து வருகிறோம் இது முட்டாள்தனமான வாதமில்லையா❓*
*உலகம் முழுவதும் ஒரே நாள் பிறை பார்த்து பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற ஏதாவது ஒரு அறிவிப்பை இந்த மூடர்களால் காட்ட இயலுமா? அதற்குரிய குர்ஆன் மற்றும் நபிவழி ஆதாரங்களை முன்னிருத்த இயலுமா❓✍✍✍*

📔📔📔நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவிக்காத மறைவான ஞானத்தை இந்த மூடர்களுக்கு அறிவித்துவிட்டானா❓ இந்த சர்வதேச பிறை குழப்பவாதிகள் ஃபித்னாக்களை அள்ளிவீசுவதை சிந்திக்க மாட்டீர்களா❓
சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையான வர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்’ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவிலில்லை.📔📔📔

*அறிவிப்பவர்: மாலிக் இப்னு* *ஹுவைரிஸ்(ரலி) நூல்: புகாரி 631*

*👆👆👆மேற்கண்ட ஹதீஸ் நமக்கு ஆதாரமாக விளங்கவில்லையா❓👈👈👈*

*🌐🌐என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்🌐🌐*

*✍✍✍இன்று அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது என்பதற்காக மார்க்கத்தை விளையாட்டாக கருத இயலுமா? அல்லது மார்க்க சட்ட திட்டங்களை மாற்ற இயலுமா❓ அப்படியெனில் அந்த அறிவியல் தொழில் நுட்பத்தைத்தானே பல எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் அறிவுறுத்துகின்றன அவ்வாறிருக்க சர்வதேச பிறை கொள்கை ஒரு புதுமை பித்அத் இல்லையா❓✍✍✍*

*👹👹👹குழப்பவாதிகள் யார்❓👹👹👹*

📚📚📚1400 ஆண்டுகளாக இல்லாத குழப்பம் இன்று பிறந்துவிட்டது அன்று முதல் இன்றுவரை பெருநாள் பிறை விஷயத்தில் எந்த முரண்பாட்டையும் மக்களால் காண இயலவில்லை ஆனால் சுமார் 20 ஆண்டுகளாக இந்த சர்வதேச பிறை அமைப்பை சார்ந்த மூடர்கள் சவுதி பிறை என்றும் விஞ்ஞானம் வளா்ந்துவிட்டது என்றும் ஒரே உலகம் ஒரே பிறை என்று கூப்பாடு போட்டு மார்க்கத்தை விளையாட்டாக ஆக்கிவிட்டார்கள்.📚📚📚

*✍✍✍அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்வோர் இவர்களுக்கு முன் சென்றோர் இழிவுபடுத்தப்பட்டது போல் இழிவுபடுத்தப் படுவார்கள். தெளிவான சான்றுகளை அருளியுள்ளோம். (நம்மை) மறுப்போருக்கு இழிவு தரும் வேதனை இருக்கிறது.✍✍✍*

*(குர்ஆன் 58:5)*

*🌙🌙🌙ஒரே பிறை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அறியாத செய்தியா❓🌙🌙🌙*

🌈🌈🌈பிறை விஷயத்தில் சர்வதேச பிறை அமைப்பை சார்ந்தவர்கள் முன்வைக்கும் வாதம் உலகம் முழுவதும் ஒரே பிறை ஒரே நாளில் பெருநாள் என்பதே அப்படி இவர்கள் நமக்கு அறிவுறை கூறுவதிலிருந்து இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் செயலை அறங்கேற்றிவிட்டனர்.
உலகத்திற்கு ஒரு சந்திரன் மற்றும் ஒரு பிறை என்பது அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல மாறாக அல்லாஹ் படைப்பினங்களை படைத்த காலத்திலிருந்தே ஒரு நிலவும் ஒரு பிறையும்தான் உள்ளது இதை இவர்கள் ஏதோ புதிதாக கண்டுபிடித்துவிட்டதாக உளருகிறார்கள் அப்படியானால் இவர்கள் கூறும் மறைமுக செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எட்டாத செய்தி இவர்களுக்கு எட்டியது என்பதே!🌈🌈🌈

*✍✍✍அறிந்துக் கொள்ளுங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே செருப்பின் வார் பேசும், பாறை பேசும் என்ற அறிவியல் தத்துவங்களை அழகாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள் அப்படிப்பட்ட இறுதித்தூதர் பிறை விஷயத்தில் பிற்காலத்தில் மக்களாகிய நீங்களே கண்டுபிடித்து தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று கூறவில்லையே இந்த அடிப்படையைக் கூட சிந்திக்கமாட்டீர்களா❓✍✍✍*

*👉👉👉மாறு செய்வோர் யார்❓👇👇👇👇👇*

⛱⛱⛱மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக கொண்டுவருபவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர்களாவர் அதன் அடிப்படையில் உலகத்திற்கு ஒரே நாளில் பிறை ஒரே நாளில் பெருநாள் தொழுகை என்று கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பின்பற்றாத பின்பற்ற அறிவுறுத்தாத ஒரு கொள்கையை புதிதாக திணித்து தாங்கள்தான் சத்திய மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் என்று அறிவிப்பு செய்கிறார்களே இந்த சர்வதேச பிறை அமைப்பினர் இவர்கள்தான் தெளிவான மூடர்கள் இவர்கள்தான் இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவனது தூதர்களும் கூறாத ஒன்றை சட்டமாக ஆக்கி மார்க்கத்தில் மாறு செய்வோராக திகழ்கிறார்கள். இதோ இவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை!⛱⛱⛱

*✍✍✍அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்✍✍✍*

. *(குர்ஆன் 33:36)*

*🌎🌎🌎சர்வதேச🌙🌙🌙 பிறை🌙🌙🌙 ஒரு பித்அத்👹👹👹*

🕋🕋🕋நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த ஒரு அமலும் புதுமை ஒவ்வொரு புதுமையும் வழிகேடு என்ற அடிப்படையில் சர்வதேச பிறை என்பது நபிகள் நாயகம் (ஸல்) காட்டித்தராத வழிபாட்டு முறையாகும் எனவே சர்வதேச பிறை மற்றும் ஒரே நாள் உலகம் முழுவதும் பிறை பார்த்து நோன்பு நோற்று ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பது புதுமை எனும் பித்அத் ஆகும் எனவே நபிகளார் (ஸல்) காட்டித்தராத அமல்களை செய்பவனும் அதை ஆதரிப்பவனும் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் மாறு செய்த குற்றவாளிகளாகின்றனர் எனவே இவர்களை பின்பற்றுவது தெளிவான வழிகேடாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.🕋🕋🕋

*அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி 2697*

*🌙🌙🌙பிறை🌙🌙🌙 விஷயத்தில்👹👹👹 குழப்பம் இல்லை🌙🌙🌙*

*✍✍✍🌙🌙பிறை பார்த்து நோன்பு நோற்கவும் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடவும் தெளிவான அறிவுரைகள் 📚📚📚ஹதீஸ்களில் உள்ளன ஆனால் இதை ஏற்க 🌎சர்வதேச🌙🌙 பிறை அமைப்பினராகிய 🌙🌙🌙பிறை குழப்பவதிகளாகிய இவர்களின் உள்ளங்கள் மறுக்கின்றன.*
*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்* :
‘ *நீங்கள் பிறைகண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்✍✍✍*

*அறிவிப்பவர் இப்னு உமர்(ரலி).  நூல் :புகாரி 1900*

📕📕📕மேற்கண்ட நபிமொழியில் உங்களுக்கு வானில் மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது அதன் படி மேகங்கள் பிறையைக் காண தடையாக இருக்கும் என்பதை உணர முடிகிறது அதற்காக நாம் எந்த சிரமத்தையும் ஏற்க வேண்டியதில்லை.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.📕📕📕

*அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல்:புகாரி 1906*

*🌐🌐🌐ஆணவமும் குழப்பமும்🌎🌎🌎*

*✍✍✍🌎சர்வதேச🌙🌙🌙 பிறை குழப்பவாதிகள் தங்கள் கொள்கையில் தாங்கள் உறுதியானவர்களாக இருக்கிறார்கள் இவர்கள் அல்லாஹ்வின் சட்டங்களை மதிக்கவும் இல்லை நபிகளாரின் நெறிமுறைகளை பின்பற்றவும் இல்லை மாறாக தாங்கள் கொண்ட தவறான சிந்தாந்தத்தின் மூலம் மதிகெட்டு ஆணவம் கொண்டு 1400 ஆண்டு காலம் இஸ்லாத்தல் இல்லாத இந்த பிறையில் குழப்பத்தை வரலாற்று சதியை பித்அத்தை நுழைத்து விட்டார்கள் இதோ ஆணவமும் குழப்பமும் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை மாறாக ஆணவத்தையும் குழப்பத்தையும் விட்டு ஒதுங்கிக் கொள்வோருக்கும் அதை விரும்பாத மக்களுக்கும்தான் மகத்தான தீர்ப்பு நாளிற்கு பிறகு கிடைக்கும் மறுமை வாழ்க்கை உள்ளது என்பதை அறிந்துக் கொள்ளங்கள் இதை சர்வதேச பிறை கொள்கைவாதிகள் சிந்திக்கமாட்டார்களா❓✍✍✍*

📘📘📘பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.📘📘📘

*(குர்ஆன் 28:83)*

*🌎🌎🌎சர்வதேச🌙🌙🌙 பிறை🌙🌙🌙 கொள்கை ஒரு👹👹👹 வழிகேடு🌎🌎🌎*

*✍✍🌎சர்வதேச 🌙🌙🌙பிறை நபிகளார்(ஸல்)செயல்படத்தவில்லைசஹாபாக்கள்* *பின்பற்றவில்லை 📚📚குர்ஆனில் உலகம்* *முழுவதும் ஒரே நாள் பெருநாள் இல்லை நபிமொழிகளில்* *🌎🌎சர்வதேக ஒரே நாள் பெருநாள் இல்லை*
*1400 ஆண்டுகாலமாக இஸ்லாத்தில் 🌎🌎சர்வதேச🌙🌙 பிறை இல்லை*
*நபிமொழிக்கு மாற்றமான கொள்கை குர்ஆனுக்கு மாற்றமான கொள்கை*
*🌎🌎சர்வதேச🌙🌙🌙 பிறை கொள்கை புதுமையான  அநாச்சாரம்*
*📚📚குர்ஆன்📚📚📚 சுன்னா ஆதாரமற்ற கொள்கை✍✍✍*

*🌎🌎சர்வதேச 🌙🌙🌙பிறையால்👹👹👹 தடம் புரண்ட ஜமாஅத்துகள்🌎🌎*

📙📙📙அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்று குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றுகிறோம் என்ற அழகான பெயர் வைத்துக் கொண்டு சர்வதேச பிறை விஷயத்தில் மார்க்க நெறிமுறைகளை மீறிவிட்டனர்.
இவர்கள் என்னத்தான் குர்ஆன் ஹதீஸ்களை போதித்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையையும் மீறிவிட்டதால் இந்த ஜமாஅத்தார் தங்கள் பெயருக்கு ஏற்றாற்போன்று நடந்துக் கொள்ளவுமில்லை அதில் உறுதியாக இருக்கவுமில்லை மாறாக தடம்புரண்ட தவ்ஹீத் கொள்கை வாதிகளாகத்தான் மாறிவிட்டார்கள் இவர்கள் சர்வதேச பிறை கொள்கையை கைவிடாதவரை இவ்வாறே வழிகேட்டில் நீடித்து இருப்பார்கள்.📙📙📙

*✍✍✍அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்❓ வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.✍✍✍*

*(குர்ஆன் 3:83)*

📗📗📗தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்📗📗📗.

*(குர்ஆன் 6:159)*

*🌐🌐🌐அல்லாஹ்வுக்கு அஞ்சாத உள்ளங்கள்!🌐🌐🌐*

*✍✍✍இன்று உலகம் முழுவதும் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருவதற்கு குர்ஆனும் ஹதீஸ்களும் மக்களிடம் சென்று சேருவதே காரணமாக இருக்கிறது ஆனால் இந்த பித்அத்வாதிகள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றம் செய்வதால் யார்தான் இஸ்லாத்திற்குள் வர முயற்சி செய்வார்கள் ஆண்டு தோறும் நடக்கும் பிறை குழப்பத்தைக் கண்டு உலகமே சிரித்துக் கொண்டிருக்கும் போது சாரை சாரையாக இஸ்லாத்தை நோக்கி வரும் மக்கள் கூட ஒரு நிமிடம் சர்வதேச பிறை எனும் முட்டாள் கொள்கையை சிந்தித்து பார்க்கின்றனரே எனவே ஏக இறைவனை ஏற்ற மனிதர்களாக நாம் வாழ்ந்து என்ன பயன்❓✍✍✍*

📒📒📒அல்லாஹ்வின் குர்ஆனை படித்தோம் அதன் படி நடக்கவில்லை!
நபிகளாரை நேசிக்கிறோம் அவரை முழுமையாக பின்பற்ற வில்லை!
தவ்ஹீதை ஏற்றோம் பிறைவிஷயத்தில் முரண்பட்டோம்!
புதுமையான சர்வதேச பிறையை ஆதரிக்கிறோம்!
மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கமாக்குகிறோம்!
மக்களை மூடர்களாக்கி திசை திருப்பிவிடுகிறோம்!
மொத்தத்தில் நாம் குர்ஆன் ஹதீஸ்களை கற்றுணர்ந்த கருத்துக் குருடர்களாக வாழ்ந்து உலகத்தில் தொழுது, நோன்பு நோற்று, ஹஜ் உம்ரா செய்து மாற்று மதத்தவர்கள் முன்னிலையில் முஸ்லிம்களாக நடித்து வருகிறோமே தவிர இறையச்சமுள்ள இறைவனின் அடியார்களாக மாறவில்லையே இப்படிப்பட்ட நாடகதாரிகளாகிய நம்மை இறைவன் நேசிப்பானா❓📒📒📒

*✍✍✍மார்க்கத்திற்கு முரணான காரியங்களை விட்டு ஒதுங்காமல் குர்ஆன் ஹதீஸ்களை பற்றிப் பிடிக்காமல் தாங்கள் கொண்ட சர்வதேச பிறை விஷயத்தில் தடம் புரண்டு வாழ்ந்து வருவதால் மறுமையில் கைசேதப்பட்டு நிற்பதை விட இழிவு ஏதாவது உண்டா❓ சிந்திக்கமாட்டீர்களா❓✍✍✍*

📓📓📓அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. 📓📓📓

*(குர்ஆன் 33:21)*

*✍✍✍அல்லாஹ் 🌎🌎சர்வதேச🌙🌙🌙 பிறை🌙🌙🌙 குழப்பவாதிகளுக்கு நேர்வழிகாட்டுவானாக!*  *வருத்தமான கட்டுரை என்பதால் முன்னுரையும் தேவையில்லை முடிவுரையும் தேவையில்லை எழுதுவதற்கு மனம் வருந்துகிறேன்!*
*இக்கட்டுரையை படித்து என் நட்பிலிருந்து யார் விலக எண்ணினாலும் அதற்கு கவலைப்படுவதுமில்லை துக்கப்படுவதுமில்லை அல்லாஹ்வே நம் மீது அன்பு செலுத்த போதுமானவன்!✍✍✍*

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment