பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, June 29, 2019

நபியும் என்ற சொல்லும் ரசூல் என்ற சொல்லும் ஒன்றா

*🏓🏓🏓மீள் பதிவு🏵🏵🏵*

*📚📚📚நபியும் என்ற சொல்லும் ரசூல் என்ற சொல்லும் ஒன்றா ❓❓❓📚📚📚*

*👉👉👉நபியும், ரசூலும் ஒன்றே👈👈👈*

*👉👉👉அல்லாஹ் தன் திருமறையில் இதற்கான அடுக்கு அடுக்கான வசனத்தில்* *தெளிவான விளக்கம் கூறியுள்ளான் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇*

*✍✍✍நபி என்ற சொல்லையும், ரசூல் என்ற சொல்லையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வருகின்றோம்✍✍✍.*

*✍✍✍இவ்விரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா❓* *இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லக் கூடிய சொற்களா❓* *இதை நாம் இன்ஷா அல்லாஹ் விரிவாக அறிந்து கொள்வோம்.👇👇👇*

*✍✍✍நபி என்ற சொல்* *நபஅ என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.* *இச்சொல்லுக்கு அறிவிப்பவர் என்று பொருள்.* *அல்லாஹ்விடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு* *அறிவிப்பவர் என்ற கருத்தில் இறைத்தூதர்கள் நபி* *என்று குறிப்பிடப்படுகின்றனர்✍✍✍.*

*✍✍✍ரசூல் என்றால் சொந்தக் கருத்தைச் சொல்லாமல் பிறரது கருத்தை அப்படியே கொண்டு சேர்ப்பவர் அதாவது தூதர் என்பது பொருள்.* *இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுகிறார்கள் என்ற அடிப்படையில் ரசூல் *–*தூதர் என்று சொல்லப்படுகிறது.✍✍✍*

*✍✍✍எல்லா நபியும் இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுவதால் அவர் ரசூலாகவும் இருக்கிறார்.✍✍✍*

*✍✍✍எல்லா ரசூலும் இறைவனிடமிருந்து பெற்ற செய்திகளை மக்களுக்கு மறைக்காமல்* *அறிவித்து விடுவதால் அவர்கள் நபியாகவும் இருக்கிறார்கள்.✍✍✍*

*✍✍✍ஒருவர் ரஸுலாக இருந்தால் அதாவது மக்களுக்காக அல்லாஹ்விடமிருந்து செய்திகளைப் பெற்றவராக இருந்தால் அவர் கட்டாயம்* *நபியாகவும் இருக்க வேண்டும். அதாவது மக்களுக்கு அதை அறிவிப்பவராக இருக்க வேண்டும்.* *இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகும். இதுதான் இச்சொற்களுக்கிடையே உள்ள வேறுபாடு✍✍✍* .

*✍✍✍இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்று சிலர் வாதிடுகின்றனர்* . *ரசூல் என்றால் வேதம் கொடுக்கப்பட்டவர்கள். நபி என்றால் வேதம் கொடுக்கப்படாதவர்கள் என்று சிலர் வித்தியாசப்படுத்துகின்றனர்✍✍✍* .

*✍✍✍இன்ஷா அல்லாஹ் பார்க்க      📚அல்குர்ஆன்📚 2:129, 2:151, 2:252, 3:164, 3:184, 4:136, 5:15,5:67, 5:83, 6:130, 7:35, 9:97, 35:25, 39:71,57:25, 62:2 ஆகிய வசனங்கள் ரசூலுக்கு வேதம் வழங்கப்படும் என்று சொல்வதைச் சான்றாகக் காட்டுவார்கள்.✍✍✍*

*✍✍✍ஆனால் 2:136, 2:213, 3:79, 3:81, 3:84, 5:81,19:30, 37:112-117, 29:27, 45:16, 57:26 ஆகிய வசனங்கள் நபிக்கும் வேதம் வழங்கப்பட்டது என்று சொல்வதால் இவர்களின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.✍✍✍*

*✍✍✍ரசூலுக்கு தனி மார்க்கம் வழங்கப்படும். நபி என்பவர்* *இன்னொரு நபிக்கு வழங்கப்பட்ட மார்க்கத்துக்குப் புத்துயிர் ஊட்டுவார்* *என்று சிலர் வாதிடுகின்றனர்.✍✍✍*

*✍✍✍9:33, 10:47, 17:15, 48:28, 61:9 ஆகிய வசனங்கள் ரசூலுக்கு தனி மார்க்கம் என்று சொல்வதை சான்றாகக் காட்டுகின்றனர். இது தவறாகும்.✍✍✍*

*✍✍✍ஏனெனில் 19:49, 66:8 ஆகிய வசனங்கள் நபிக்கும் தனி மார்க்கம் வழங்கப்பட்டதாகக் கூறுகிறது.✍✍✍*

*✍✍✍மேலும் பார்க்க           📚அல்குர்ஆன்📚 7:157, 7:158, 9:61, 19:51, 19:54, 43:6ஆகிய வசனங்கள் நபியும் ரசூலும் ஒன்று என்று சொல்கின்றன.✍✍✍*

*✍✍✍நபி, ரசூல் வேறு என்று கருதும் வகையில் ஒரே ஒரு வசனம் (பார்க்க           📚அல்குர்ஆன் 📚22:52) மட்டும் உள்ளது. ஆனாலும் அதுவும் இந்த வாதத்தை நிலைநாட்ட உதவாது.✍✍✍*

*✍✍✍இவ்வசனத்தில் (22:52) நாம் அனுப்பிய எந்த நபியானாலும், எந்தத் தூதரானாலும்… என்ற சொற்றொடர் இடம் பெறுகின்றது.* *நபியும் ரசூலும் ஒன்றல்ல; வெவ்வேறானவை எனக் கூறுவோர் இதைச் சான்றாகக் காட்டுவார்கள்.✍✍✍*

*✍✍✍இதை அப்படியே பொருள் கொண்டு, நபி வேறு; ரசூல் வேறு எனக் கூறினால் அதற்கு* *மாற்றமாக அமைந்த ஏராளமான வசனங்களை நிராகரிக்கும் நிலைமை ஏற்படும்.✍✍✍*

*✍✍✍மனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு சொற்களைப் பயன்படுத்தி,* *தனித்தனி பொருள் போன்று கூறும் வழக்கம் உள்ளது. குறிப்பாக எதிர்மறையாகப் பேசும்போது இது அதிக அளவில் காணப்படுகிறது.* *அரபுமொழி உட்பட இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த வழக்கம் உள்ளது.✍✍✍*

*👉உதாரணமாக👈*

*👉👉எனக்கு எந்தக் கூட்டாளியும், நண்பனும் கிடையாது.👈👈*

*👉👉👉எனக்கு எந்தச் சொந்தமும், பந்தமும் இல்லை என்பன போன்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம்👈👈👈* .

*✍✍✍அதிக அழுத்தம் கொடுப்பதற்காக ஒரே கருத்தில் அமைந்த இரு சொற்களை, இரு கருத்துக்களைப் போல் பயன்படுத்துகிறோம்.* *அது போல் மேற்கண்ட வசனத்தைப் புரிந்து கொண்டால் நபியும் ரசூலும் ஒன்றே எனக் கூறும் வசனங்களுடன் பொருந்திப் போகின்றது.✍✍✍*

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment