பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, April 27, 2018

சூனியத்தால் தாக்கம் உண்டா?

*சூனியத்தால் தாக்கம் உண்டா ?*

 சூனியத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்த முடியாது.சூனியக் காரர்கள் சில தந்திர வித்தைகளை காட்டி தனக்கு மந்திர வித்தைகள் தெரியும் என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர், புர சாதனங்கள் இன்றி எங்கோ இருக்கும் ஒருவன் இன்னொருவனுக்கு பாதிப்பை ஏற்பத்த முடியும் என்பது இஸ்லாமிய நம்பிக்கைக்கே மாற்றமானது என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் எடுத்தியம்பி வருகிறோம்.. இதற்கு சான்றாக ஏராளமான ஆதாரங்களை முன்வைத்த போதிலும் சூனியத்தை நம்பக்கூடியவர்கள் அதற்கு ஒரு புரட்டி வாதங்களை கற்பித்து மக்களை குழப்பி வருகின்றனர்...

*أحمد – (ج 45 / ص 477)*

*26212 – حدثنا أبو جعفر السويدي قال حدثنا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمعت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة عاق ولا مؤمن بسحر ولا مدمن خمر ولا مكذب بقدر*

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*

*விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.*

*அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)* 

*நூல் : அஹ்மது (26212)*

சூனியம் இல்லை என்பதற்கு இந்த நபிமொழியை நாம் சான்றாக காட்டினால்...

"அது இந்த ஹதீஸில் வரும் مؤمن بسحر என்கிற வார்த்தை சூனியம் செய்பவனைதான் குறிக்கிறது.. சூனியம் இருக்கிறது என்று நம்புவது பாவமல்ல, சூனியக்காரனை அணுகி அதை செய்தால் தான் பாவம் என்று ஒரு மேதாவித்தனமான வாதத்தை ஸலஃபுகள் என சொல்லிக்கொள்வோர் முன்வைக்கின்றனர்.. 

முஃமின் பிஸிஹ்ர் என்ற வார்த்தையை விளங்கிக் கொள்ள ஒரு எளிமையான உதாரணம் கூறுகிறேன்.

"ஆமன்த்து பில்லாஹ்" என்ற வார்த்தையை சிறுவயதிலிருந்து அதிகம் உச்சரித்து இருப்போம். "அல்லாஹ்வை நம்பினேன்" என்று பொருள்."ஆமன "آمن" - நம்பிக்கைக் கொண்டான் என்பதன் பெயர்ச் சொல் வடிவம் தான் முஃமின். முஃமின் என்பதற்கு நம்பிக்கைக் கொண்டவன் என்று பொருள் என்பதை அறிந்திருப்பீர்கள்.

ஆமன்த்து பில்லாஹ் - அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன் அல்லது முஃமின் பில்லாஹ் - அல்லாஹ்வை நம்பியவன் என்றால், அல்லாஹ் இருக்கிறான், அவனுக்கு அனைத்து ஆற்றலும் உள்ளது, என அல்லாஹ்வை குறித்த நம்பிக்கை அனைத்தும் அதில் அடங்கும்.

இப்போது முஃமின் பிஸிஹ்ர் என்பதற்கு என்ன அர்த்தம் வைப்பீர்கள் ???

முஃமின் பிஸிஹ்ர் சூனியத்தை நம்பியவன் என்றால் சூனியம் இருக்கிறது, அதற்கு புறசாதனங்களின்றி தாக்கம் ஏற்படுத்தும் ஆற்றல் இருக்கிறது என அவை குறித்த அனைத்து நம்பிக்கையும் அதில் அடங்கும் என்பதுதானே சரியான அர்த்தம். இத்தகைய நம்பிக்கை வந்தாலே அது வழிகேடு தானே.. பிறகென்ன சூனியம் செய்தால் தான் பாவம், நம்பினால் பாவமல்ல என்கிற வாதம்..!!

அல்லாஹ்வுக்கு இணையாக ஒருவன் அல்லது ஒன்று இருக்கிறது என நம்பினால் பாவமல்ல, இணைவைத்தால் தான் பாவம் என்று சொல்வதுபோல் உள்ளது உங்களின் வாதம்.

இப்போது யார் தவறான அர்த்தம் வைக்கிறார், யார் ஆதாரமின்றி தர்க்கத்தின் அடிப்படையில் போராடுகிறார் என புரிகிறதா ? 

மேலும் ஒருப்பேச்சுக்கு இந்த ஹதீஸை இவர்களின் தவறான வாதப்படியே எடுத்துக் கொண்டாலும் சூனியம் பொய் வித்தை என்பதற்கு இதை மட்டுமே நாம் ஆதாரமாக காட்டவில்லையே.. இதைவிட தெளிவான இறைவசனங்கள் சான்றாக உள்ளனவே...

உதாரணத்திற்கு இரண்டை குறிப்பிடுகிறேன்..

*فَأَلْقَى مُوسَى عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ* 

*உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் "பொய்யாக செய்தவற்றை" அது விழுங்கி விட்டது.*

*திருக்குர்ஆன் 26:45*

*وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ* 

*உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த "வித்தையை" விழுங்கியது.* 

*திருக்குர்ஆன் 7:117*

இதுபோன்ற வசனங்களை குறிப்பிட்டால் பிஜெ மொழிபெயர்ப்பில் தனக்கு சாதகமாக மாற்றிவிட்டார், சூனியம் என மொழிபெயர்க்க வேண்டிய இடங்களில் பொய் வித்தை, வித்தை என்று மொழிபெயர்த்துள்ளார் எனக் கூறுவீர்கள்.. ஆனால் 26:45 வசனத்திற்கு IFT மொழிபெயர்ப்பில் கூட *يأفكون* என்ற வார்த்தைக்கு பொய்யான வித்தை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது..

குர்ஆனிலும் இந்த *يأفكون* என்கிற வார்த்தை வேறுசில வசனங்களிலும் திசை திருப்புதல் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அகராதியிலும் *يأفكون* என்ற வார்த்தைக்கு பொய், திசை திருப்புதல் போன்ற அர்த்தங்களுக்கு இணையான சொல்லாகவே குறிப்பிடப் பட்டுள்ளது.. 

ஆனால் இக்பால் மதனியின் தவறான மொழிபெயர்ப்பை எடுத்து வைத்துக் கொண்டு ஆய்வு செய்யாமல் பேசுவதல்திலிருந்து சஃலபு கூட்டம் கண்மூடித்தனமாக அவரை தக்லீது செய்கிறது என்பதை விளங்களாம்..

இது எல்லாம் அறிந்த பின்னும் பிஜெ குர்ஆன் மொழிபெயர்ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் என்று கூறினால், மக்கள் விளங்கிக் கொள்வார்கள் யார் பொய்யர்கள் என்று.

சூனியம் அற்புதம் மாயஜால மண்ணாங்கட்டியெல்லாம் ஒன்றுமில்லை . மேஜிக் போன்ற கண்கட்டி தந்திரை வித்தை மட்டுமே என்பதற்கு ஏராளமான சான்றுகள் இதுபோல் உள்ளன.

*அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.*

*திருக்குர்ஆன் 39:9*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*திருநறையூர் நாச்சியார்கோயில் கிளை*

1 comment:

  1. இப்லீஸ் உலக முடிவுநாள் வரை மனிதர்களை வழிகெடுப்பான் என்பது உண்மை.
    ஆனால் 'முஃமினு பில் இப்லீஸ்' சுவனம் செல்ல மாட்டார்கள்.

    அது போல்தான் ஸிஹ்ர் என்பது அன்றும் உண்டு, இன்றும் உண்டு.
    ஆனால் 'முஃமினு பிஸ்ஸிஹ்ர்' சுவனம் செல்ல மாட்டார்கள்.

    ReplyDelete