பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, August 24, 2010

தூதருக்குக் கட்டுப்படுதல்


தூதருக்குக் கட்டுப்படுதல்

மனித குலத்துக்கு வழி காட்டிட அல்லாஹ் அல்குர்ஆனை வழங்கி அதை அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக ஆக்கினான். இறைத்தூதரின் விளக்கம் தேவையில்லை என்று வாதிப்போர் உண்மையில் திருக்குர்ஆனையே மறுக்கின்றார்கள் என்பதை திருக்குர்ஆனின் சான்றுகளி­ருந்தே நாம் நிலை நாட்டி வருகின்றோம்.


நாம் சுட்டிக் காட்டிய பல வசனங்களை குர்ஆனில் இல்லாதது போல் கண்டு கொள்ளாமல் நழுவுவதும், மிகச் சில வசனங்களுக்குச் சமாளிப்பதும் தான் இவர்களின் பதில் நடவடிக்கையாக உள்ளது.

குர்ஆனைப் பற்றிய ஆய்வும் அறிவும் இல்லாத மக்களிடம் மட்டும் தான் இத்தகையோர் பிரச்சாரம் செய்து ஏமாற்றுவார்களே தவிர நேரடியான விவாதத்துக்கு அழைத்தால் ஓடி ஒளிந்து கொள்வார்கள். இவர்களில் உள்ள ஏராளமான ‘குரூப்’ களும் விவாதம் என்றால் ஓடி ஒளிபவர்களாகவே உள்ளனர். இதி­ருந்தே இவர்களின் உளுத்துப் போன வாதத்தை அறிந்து கொள்ள முடியும்.

திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்­ம்களின் மீது கடமை என்பதை விளக்கும் மேலும் பல சான்றுகளைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் தொழுகையை வ­யுறுத்தும் வசனங்கள் மிக அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. மேலும் சில விஷயங்களும் அடிக்கடி வ­யுறுத்தப் பட்டுள்ளன. இவ்வாறு அதிகமாக வ­யுறுத்தப் பட்ட விஷயங்களில் ”அல்லாஹ்வுக்கும் கட்டுப் படுங்கள்! அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்” என்பதும் ஒன்றாகும்.

ஒரிரு இடங்களில் அல்ல. ஏராளமான இடங்களில் இந்தக் கட்டளை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

”அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்” என்று (நபியே!) நீர் கூறும். ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் லி நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 3 : 32)

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப் படுவீர்கள். (அல்குர்ஆன் 3 : 132)

எவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான். அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள். லி இது மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 4 : 13)

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், சித்தீக்கீன்கள் (சத்தியவான்கள்), ஷுஹதாக்கள் (உயிர்த் தியாகிகள்), ஸா­ஹீன்கள் (நற்கருமங்கள் உடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள். இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 4 : 69)

எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கட்டுப்படுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுகின்றார். யாராவது ஒருவர் (இவ்வாறு கட்டுப்படுவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4 : 80)

இன்னும் அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5 : 92)

நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அல்குர்ஆன் 8 : 1)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரைப் புறக்கணிக்காதீர்கள். (அல்குர்ஆன் 8 : 20)

இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றி விடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன்8:46)

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச் செய்யத் தூண்டுகிறார்கள். தீயதை விட்டும் விலக்குகின்றார்கள். தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள். ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுகின்றார்கள். அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9 : 71)

இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கின்றார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 24 : 52)

”அல்லாஹ்வுக்கு நீங்கள் கட்டுப்படுங்கள். இன்னும் (அவனுடைய) ரசூலுக்கும் கட்டுப்படுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப் பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)து தான். இன்னும் உங்கள் மீதுள்ள(கடமையான)து உங்கள் மீது சுமத்தப் பட்ட(படி நீங்கள் வழிபடுவ)து தான். எனவே நீங்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள். இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர் மீது கடமையில்லை. (அல்குர்ஆன் 24 : 54)

(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப் படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள். மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கட்டுப்படுங்கள். (அல்குர்ஆன் 24 : 56)

(நபியின் மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள். தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து வாருங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகின்றான். (அல்குர்ஆன் 33 : 33)

நெருப்பில் அவர்களுடய முகங்கள் புரட்டப் படும் அந்நாளில், ”ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 33 : 66)

அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கட்டுப்படுகின்றாரோ அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். (அல்குர்ஆன் 33 : 71)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள், இன்னும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள். (அல்குர்ஆன் 47 : 33)

(போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றமில்லை. முடவர் மீதும் குற்றம் இல்லை. நோயாளி மீதும் குற்றம் இல்லை. அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகின்றாரோ அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் எவன் பின்வாங்குகின்றானோ அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான். (அல்குர்ஆன் 48 : 17)

”நாங்கள் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப்புறத்து அரபிகள் கூறுகின்றார்கள். ”நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் ‘நாங்கள் வழிப்பட்டோம்’ (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள்” என்று (நபியே! அவர்களிடம்) கூறுவீராக! ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை. மேலும் நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில் எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 49:14)

தொழுகையை முறைப்படி நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள். அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகின்றான். (அல்குர்ஆன் 58 : 13)

நீங்கள் அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். (அவனுடைய) இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள். இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பது தான். (அல்குர்ஆன் 64 : 12)

அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என்று இத்தனை இடங்களில் அல்லாஹ் வ­யுறுத்திக் கூறுகின்றான்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாதவர்கள் காஃபிர்கள்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பதன் மூலமே இறையருள் கிட்டும்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாவிட்டால் செய்கின்ற நல்லறங்கள் பாழாகி விடும்.

என்றெல்லாம் மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவன் முஸ்­மா அல்லவா என்பதை அளந்து பார்க்கக் கூடிய அளவு கோலாக இந்தக் கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது.

தொழுகை நோன்பு போன்ற கட்டளைகளை மீறினால் அது பெருங்குற்றமாகக் கூறப்பட்டாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய காரணமாக குர்ஆனில் கூறப்படவில்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட மறுத்தால் அது இஸ்லாத்தை விட்டே ஒருவனை வெளியேற்றும் காரணமாக கூறப்படுகின்றது.

எனவே, பல இடங்களில் கூறப்பட்டுள்ளதாலும் மிகுந்த முக்கியத்துவத்துடன் கூறப்பட்டுள்ளதாலும் இக்கட்டளையை சரியாகப் புரிந்து கொள்வது ஒன்றே ஈமானைப் பாதுகாக்க முடியும்.

திருக்குர்ஆனை மட்டும் அல்லாஹ் வழங்கி வேறு எந்த வழிகாட்டுதலையும் வழங்காமல் இருந்தால் லி குர்ஆனைக் கொண்டு வந்து மக்களிடம் தருவது மட்டுமே தூதரின் பணி, வேறு பணி ஏதும் அவருக்கு இல்லை என்றிருந்தால் இவ்வாறு இறைவன் நிச்சயமாகக் கூறமாட்டான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறுவது மட்டுமே இந்தக் கருத்தைத் தெளிவாகக் கூறிவிடும் போது தேவையில்லாமலும் வேறு கருத்தைக் கொடுக்கும் வகையிலும் ”இறைத்தூதருக்குக் கட்டுப்படுங்கள்” என்று கூறியிருக்க மாட்டான்.

இறைத் தூதரின் விளக்கமும் வஹீ தான் என்பதைப் பல வசனங்களை ஆதாரமாகக் காட்டி இத்தொடரில் நிரூபித்துள்ளோம். இறைத்தூதரின் அந்த விளக்கங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதைத் தான் இக்கட்டளைகள் வ­யுறுத்துகின்றன.

குர்ஆனில் உள்ளதை மட்டும் பின்பற்றுவது தான் ரசூலுக்குக் கட்டுப்படுவது என்று நபிவழியை மறுப்போர் கூறுவார்கள்.

அல்லாஹ் வீணான லி தேவையில்லாத லி குழப்பமான வார்த்தைகளைக் கூறி விட்டான் என்று அல்லாஹ்வையும் குர்ஆனையும் இழிவு படுத்தியாவது தங்களின் மனோ இச்சையை நிலை நாட்ட எண்ணுகிறார்கள் என்பது இவர்களின் பதி­­ருந்து தெரிகின்றது.

‘இதாஅத்’ என்ற மூலச் சொல்லே மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஒருவரது கட்டளையை ஏற்று அப்படியே செயல்படுவது என்பது இதன் பொருளாகும்.

இதன் பொருளைச் சரியாக விளங்கிட அல்குர்ஆனின் 4 : 59 வசனத்தை உதாரணமாகக் எடுத்துக் கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பிள் லி அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4 : 59)

 அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்.

 தூதருக்குக் கட்டுப்படுங்கள்.

 அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுங்கள்.

என மூன்று கட்டளைகள் இவ்வசனத்தில் உள்ளன. முத­ரண்டு கட்டளைகளை விட்டு விடுவோம். மூன்றாவது கட்டளைக்கு என்ன பொருள்? அதிகாரத்தில் இருப்பவர்கள் போடுகின்ற உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டம் ஒப்புக் கொள்கின்றது. அதிகாரமுடையவர்களுக்கு இவர்கள் வழங்குகின்ற மரியாதை கூட அல்லாஹ்வின் தூதருக்கு வழங்குவதில்லை என்பது இதி­ருந்து தெரிகின்றது.

அதிகாரமுடையவர்கள் கூறுகின்ற கட்டளைகளுக்குக் கட்டுப்படலாம் என்று பொருள் செய்த இவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுபடுங்கள் என்பது எந்தப் பொருளும் அற்றது என்று வாதிடுவதை விட அறியாமை வேறு இருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் இவ்வசனத்தில் அதீவூ (கட்டுப்படுங்கள்) என்ற சொல் இரண்டு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள் என்பது ஓர் இடம். அலலாஹ்வின் தூதருக்கும் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்பது இரண்டாவது இடம்.

அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுவதைக் குறிக்கும் போது அதனுடன் சேர்த்து ரசூலுக்குக் கட்டுப்படுவதையும் இறைவன் கூறுகின்றான். இதி­ருந்து அதிகாரமுடையவர்கள் சுயமாகக் கூறும் கட்டளைகளுக்குக் கட்டுப் படுவது போன்று தூதரின் கட்டளைக்கும் கட்டுப்படவேண்டும் என்பது உறுதியாகின்றது. ”தூதருக்குக் கட்டுப்படுவது என்பதன் பொருள் லி குர்ஆனுக்குக் கட்டுப்படுவதுதான்” என்ற வாதம் இதனால் அடிபட்டுப் போகின்றது.

மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனங்களில் 8 : 20, 24 : 54 ஆகிய வசனங்களில் ரசூலுக்குக் கட்டுப்படுவது கூடுதலாக முன்னிறுத்தப் படுகின்றது. ‘அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவரைப் புறக்கணிக்காதீர்கள்’ என்று கூறப்படுகின்றது. அவ்விருவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று கூறாமல் அவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று 8 : 20 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வைப் புறக்கணிக்க மாட்டார்கள். தூதரைப் புறக்கணிக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள் என்பதற்காகத் தேர்வு செய்து பயன்படுத்தப் பட்டது போல் இவ்வாசகம் அமைந்துள்ளது.

24 : 54 வசனத்தில் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று துவங்கி விட்டு, நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமை அவருக்கு, உங்கள் மீதுள்ள கடமை உங்களுக்கு என்றும் அவரைப் பின்பற்றினால் நேர்வழி அடைவீர்கள் என்றும் கூறுகின்றான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை அல்லாஹ் எவ்வாறு நம் மீது கடமையாக்கியுள்ளானோ அது போலவே அவனது தூதருக்குக் கட்டுப்படுவதையும் கடமையாக ஆக்கியுள்ளான் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் தாம் திருக்குர்ஆனின் இவ்வசனங்களை ஏற்பவர்களாக ஆவார்கள்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவோம், அவனது தூதருக்குக் கட்டுப்பட மாட்டோம் என்போர் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் அல்லாஹ்வுக்கே கட்டுப்படாதவர்களாக உள்ளனர் என்பதில் ஐயமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் ஏற்றுத் தான் ஆக வேண்டும் என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன.

தூதரை நோக்கி வருதல்

திருமறை குர்ஆனில் கூறப்பட்டதைப் பின்பற்றி நடப்பது எவ்வாறு அவசியமோ அது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றுவது அவசியமாகும் என்பதை திருக்குர்ஆனி­ருந்தே நாம் நிரூபித்து வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஏற்க மறுப்பவர்கள் உண்மையில் குர்ஆனைத் தான் நிராகரிக்கிறார்கள் என்பதையும் தெளிவு படுத்தி வருகிறோம். குர்ஆன் மட்டும் போதும்! நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியமில்லை என்று கூறுவோர் இது குறித்து விவாதம் நடத்திடத் தயாரா? என்று கேட்கும் போதெல்லாம் அவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டமெடுப்பதில் இருந்தும் அவர்கள் பொய்யர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

திருக்குர்ஆனை மட்டுமின்றி நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலையும் பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்பதை உறுதிப் படுத்தும் சான்றுகளை மேலும் பார்ப்போம்.

அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும் இத்தூதரின் பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் ‘முனாபிக்குகள்’ உம்மை விட்டும் ஒரேயடியாக வெருண்டு ஓடுவதை நீர் காண்பீர்!

அல்குர்ஆன் 4 : 61

இவ்வசனத்தில் இறைவன் பயன்படுத்திய இரண்டு சொற்றொடர்களைக் கவனியுங்கள்.

1. அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும் 2. இத்தூதரின் பாலும் என இரண்டு சொற்றொடர்களை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

குர்ஆன் மட்டும் தான் அல்லாஹ் இறக்கியருளியது, அது மட்டுமே போதும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்தால் ”இத்தூதரின் பாலும்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்க மாட்டான். எதையும் தெளிவாகப் பேசும் திருக்குர்ஆனில் வேண்டாத லி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய லி ஒரு சொல்லும் பயன்படுத்தப் படவில்லை என்பதை முஸ்­ம்கள் நம்ப வேண்டும்.

ஹதீஸ்களை மறுப்போரின் கருத்துப் படி அல்லாஹ் இறக்கியருளியதின் பால் வாருங்கள் என்று கூறியவுடனேயே கூற வேண்டிய செய்தி முற்றுப் பெற்று விடுகின்றது. ”இத்தூதரின் பாலும்” என்ற சொற்றொடரை அல்லாஹ் அர்த்தமில்லாமல் பயன்படுத்தி விட்டான் என்று அவர்கள் கூறுவார்களா?

அல்லாஹ் தேவையற்ற ஒரு சொல்லையும் பயன்படுத்தவே மாட்டான் என்று நம்பிக்கை கொண்டு குர்ஆனை மதிப்பவர்கள், ”இத்தூதரின் பாலும்” என்று அல்லாஹ் கூறியதை உரிய முக்கியத்துவத்துடன் கவனத்தில் கொள்ளக் கடமைப் பட்டுள்ளனர்.

திருக்குர்ஆனின் பால் மக்கள் வரக் கடமைப் பட்டுள்ளது போல் அதற்கு விளக்கமாக நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போதனைகளின் பாலும் வரவேண்டும். அவ்வாறு வருவது தான் குர்ஆனைப் பின்பற்றுவதாக ஆகும் என்பதை இவ்வசனம் தெளிவாகவே பிரகடனம் செய்வதை ஏற்றுக் கொள்வார்கள்.

இதே வசனத்தில் இறைவன் பயன்படுத்தியுள்ள மற்றொரு சொற்றொடரும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

இறைவன் இறக்கியருளியதன் பாலும் இத்தூதரின் பாலும் அழைக்கப் பட்டால் இரண்டையும் புறக்கணிப்பார்கள் என்று இவ்வசனத்தில் கூறாமல் ”உம்மைப் புறக்கணிப்பார்கள்” என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு புறக்கணிப்பவர்கள் முனாஃபிக்குகள் என்றும் பிரகடனம் செய்கின்றான்.

அல்லாஹ் இறக்கியருளியதன் பால் வருவதை ஏற்றுக் கொண்டு, இத்தூதரின் பால் வரவேண்டும் என்ற அழைப்பை யார் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தம்மை அஹ்லுல் குர்ஆன் என்று கூறிக் கொண்டாலும் இவர்களுக்கு அல்லாஹ் சூட்டும் பெயர் முனாஃபிக்குகள்.

அல்லாஹ் இறக்கியருளியதன் பால் மட்டும் வருவோம். இத்தூதரின் பால் வர மாட்டோம் எனக் கூறும் இவர்களுக்காகவே இவ்வசனம் அருளப் பட்டது போல் அற்புதமாக அமைந்திருப்பதை அவர்கள் கவனித்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் புறக்கணிக்கிறார்கள் என்று கூறாமல்

அல்லாஹ் இறக்கியருளியதைப் புறக்கணிக்கிறார்கள் என்றும் கூறாமல்

உம்மைப் புறக்கணிக்கிறார்கள் என்று இறைவன் கூறியது ஏன் என்பதை இவர்கள் சிந்திப்பார்களானால் நிச்சயமாக உண்மையை உணர்வார்கள்.

இதே போல் 5 : 104 வசனத்திலும் இரண்டு விஷயங்களின் பால் அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான்.

”அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும் இத்தூதரின் பாலும் வாருங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் ”எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகின்றார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்)

அல்குர்ஆன் 5 : 104

அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும் மேலும் இத்தூதரின் பாலும் வாருங்கள் என்று இரண்டு அடிப்படைகளின் பால் இறைவன் அழைப்பு விடுக்கின்றான். இரண்டையும் ஒருசேர மறுப்பவர்கள் பற்றி இவ்வசனத்தில் சுட்டிக் காட்டுகின்றான்.

இவ்வசனங்களி­ருந்து அல்லாஹ் இறக்கியருளியது மட்டுமின்றி அவன் தூதரின் பாலும் மக்கள் வரவேண்டும் என்பதும், இரண்டுமே இறைவனின் வஹீயை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் சந்தேகமற நிரூபிக்கப் படுகின்றது.

திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில், ”அல்லாஹ்வின் பாலும் அவனது தூதரின் பாலும் அழைக்கப் பட்டால்” என்ற சொற்றொடர் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

குர்ஆன் மட்டும் போதும் என்றிருந்தால், குர்ஆனைக் கொண்டு வந்து தருவது தவிர தூதருக்கு ஒரு வேலையும் இல்லை என்றிருந்தால் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தியிருக்க முடியாது.

மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப் பட்டால் அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள். (அல்குர்ஆன் 24 : 48)

முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்பு கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப் பட்டால், அவர்கள் சொல்வதெல்லாம் ”நாங்கள் செவியேற்றோம், கட்டுப்பட்டோம்” என்பது தான். இவர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள். (அல்குர்ஆன் 24 : 51)

மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33 : 36)

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக் கூடிய காரியத்தின் பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள். இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்கும் இடையேயும் ஆதிக்கம் செலுத்துகின்றான் என்பதையும் அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8 : 24)

அல்லாஹ்வின் பால் அழைக்கப் படுவது என்றால் திருக்குர்ஆனின் பால் அழைக்கப் படுவது என்பது பொருள். தூதரின் பால் அழைக்கப் படுவது என்றால் என்ன பொருள்? அதற்கும் திருக்குர்ஆனின் பால் அழைக்கப் படுதல் எனப் பொருள் கொள்ள முடியுமா? திருக்குர்ஆனின் பால் அழைக்கப் படுவது பற்றி ஏற்கனவே கூறப்பட்டு விட்ட பின் அவ்வாறு பொருள் கொள்வது பொருத்தமாகாது.

நாம் ஏற்கனவே நிரூபித்துள்ளபடி குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீயின் பால் அழைக்கப் படுவதையே இவ்வாறு இறைவன் குறிப்பிடுகின்றான் எனப் பொருள் கொள்வதே சரியானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல்களைப் பின்பற்றியே ஆகவேண்டும் எனக் கூறும் வசனங்கள் இத்துடன் முடியவில்லை. இன்னும் பல வசனங்கள் உள்ளன.

மீஸான்லிஸுபுர்லிஃபுர்கான்

திருக்குர்ஆனின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது எவ்வாறு அவசியமோ அதுபோலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலுக்கும் செவி சாய்த்து, கட்டுப்படுவது அவசியமாகும். இதை எந்த ஒரு ஹதீஸையும் ஆதாரமாக முன்வைக்காமல் முழுக்க முழுக்க திருக்குர்ஆன் வசனங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு கடந்த இதழ்களில் நாம் நிரூபித்தோம்.

இதை மேலும் வலுப்படுத்தக் கூடிய சில சான்றுகளை இப்போது காண்போம்.

யார் வேதத்தையும் எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் நம்ப மறுக்கின்றார்களோ அவர்கள் (இதன் விளைவைப்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.

அல்குர்ஆன் 40 : 70

தூதர்களுக்கு வேதம் மட்டும் தான் அருளப்பட்டது, வேறு எதுவும் இறைவனால் அருளப்படவில்லை என்றால் இவ்வசனத்தில் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.

! வேதத்தையும்

! எதனுடன் நமது தூதர்களை நாம் அனுப்பினோமோ அதனையும்

என்று இறைவன் கூறுகின்றான்.

எனவே வேதத்துடன் அதற்கு விளக்கவுரையான செய்திகளையும் கொடுத்தே இறைவன் தூதர்களை அனுப்புகின்றான். இரண்டுமே இறைவன் புறத்தி­ருந்து கிடைத்த செய்திகளேயாகும்.

நாங்கள்வேதத்தை மட்டும் தான் ஏற்றுக் கொள்வோம். முஹம்மது (ஸல்) அவர்கள் எதனுடன் அனுப்பப் பட்டார்களோ அதை ஏற்க மாட்டோம் என்று யாரேனும் கூறினால் அதன் விளைவை அவர்கள் மறுமையில் அறிந்து கொள்வார்கள்.

‘பின்னர் அறிந்து கொள்வார்கள்’ என்ற சொற்றொடரை ‘அவர்கள் நரகத்தையே அடைவார்கள்’ என்ற கருத்தில் திருக்குர்ஆன் பயன்படுத்துகின்றது. எனவே நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்க மறுப்போர் நரகவாசிகள் என்பதில் சந்தேகமே இல்லை.

இதுபோல் அமைந்த மற்றொரு வசனத்தையும் காணுங்கள்!

அல்லாஹ் தான் சத்தியத்துடன் இவ்வேதத்தையும் மீஸானையும் இறக்கினான்.

அல்குர்ஆன் 42 : 17

வேதத்துடன் மீஸானையும் இறக்கியதாக அல்லாஹ் இங்கே கூறுகின்றான். மீஸான் என்பதற்கு நேரடிப் பொருள் எடை போடும் கருவி என்பதாகும். தராசை மீஸான் என்று கூறுவது இந்த அடிப்படையில் தான். நன்மை தீமைகளை மறுமையில் மதிப்பிடுவதையும் இறைவன் மீஸான் என்று கூறுகின்றான்.

மீஸானை இறக்குவதாகக் கூறும் போது தராசை இறக்குவதாகப் பொருள் கொள்ள முடியாது. உலகில் நன்மை தீமைகளை எடை போட்டுக் காட்டும் அறிவுரை என்றே பொருள் கொள்ள வேண்டும். வேதத்தை இறக்கியது போலவே மீஸானையும் இறக்கியதாக அல்லாஹ் கூறும் போது இரண்டில் ஒன்றை மறுப்பவர்கள் எப்படி முஸ்­ம்களாக இருக்க முடியும்?

குறிப்பாக இவ்வசனம் நபிகள் நாயகத்தையே நோக்கிப் பேசுகின்றது. ”கியாமத் நாள் எப்போது என்பது உமக்கு எப்படித் தெரியும்?” என்று இவ்வசனம் முடிகின்றது. இதி­ருந்து முந்தைய நபிமார்களைப் பற்றி இது பேசவில்லை. நபிகள் நாயகத்தைக் குறித்தே பேசுகின்றது.

நபிகள் நாயகத்துக்கு வழங்கப் பட்ட ”கிதாப்” எனப்படுவது குர்ஆன் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட ”மீஸான்” என்பது என்ன?

இந்த இடத்திலும் தராசு என்றே பொருள் கொள்வார்களானால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன்பே தராசு இருந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. எனவே தராசையும் வேதத்தையும் இறக்கினோம் என்பதற்கு ‘குர்ஆனையும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் எடை போடக் கூடிய போதனைகளையும்’ என்பதே பொருளாக இருக்க முடியும்.

இதுபோல் மற்ற தூதர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இதுபோன்ற வார்த்தையை இறைவன் பயன் படுத்தியுள்ளான்.

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் நாம் அனுப்பினோம். மக்கள் நீதியை நிலை நாட்டுவதற்காக வேதத்தையும் மீஸானையும் அவர்களுடன் இறக்கி வைத்தோம்.

அல்குர்ஆன் 57 : 25

மனிதர்கள் நீதியை நிலை நாட்டுவதற்காகவும் நேர்வழி செல்வதற்காகவும் கிதாப், மீஸான் என்ற இரண்டு வழிகாட்டி நெறிகளை இறைவன் அனுப்பியுள்ளான். எனவே மீஸான் என்பது இறைத்தூதர்களின் விளக்கம் தவிர வேறு இருக்க முடியாது. (முந்தைய தொடர்களில் நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்பதை நாம் நிரூபித்துள்ளதைப் பார்வையிடுக)

நபிமார்கள் வேதத்தை மட்டும் இறைவனிடம் பெற்றுத் தருபவர்கள் அல்லர். வேதமல்லாத இன்னொரு வழிகாட்டுதலையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தனர் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.

இவர்கள் உம்மை நம்ப மறுத்தால் உமக்கு முன்னர் தூதர்களை நிராகரித்துள்ளனர். அவர்கள் தெளிவான அத்தாட்சிகளையும் ஸுபுரையும் ஒளி வீசும் கிதாபையும் கொண்டு வந்தனர்.

அல்குர்ஆன் 3 : 184

இவர்கள் உம்மை நிராகரித்தால் இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நிராகரித்துள்ளனர். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளையும் ஸுபுரையும் ஒளி வீசும் கிதாபையும் கொண்டு வந்தனர்.

அல்குர்ஆன் 35 : 25

இறைத்தூதர்கள் இரண்டு வழிகாட்டி நெறிகளுடன் அனுப்பப் பட்டனர் என்று இவ்விரு வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.

கிதாப் என்றாலும் ஸுபுர் என்றாலும் ஏடு என்பதே பொருளாகும். கிதாப் எனும் ஏட்டையும் ஸுபுர் எனும் ஏட்டையும் இறைத்தூதர்களுக்கு வழங்கியதாக அல்லாஹ் கூறுகின்றான்.

கிதாப் என்பதை வேதம் என்று நாம் புரிந்து கொள்கின்றோம். அப்படியானால் கிதாபுடன் அருளப்பட்ட ஸுபுர் என்பது என்ன? இறைவன் அனுப்பிய ஸுபுரை நிராகரிப்பது இறை வேதத்தையே நிராகரிப்பதாக ஆகாதா?

இரண்டு வகையான வஹீயை இறைவன் அருளியுள்ளதால் தான் கிதாபையும் ஸுபுரையும் அனுப்பினோம் என்று கூறுகின்றான்.

நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு கிதாபையும் ஃபுர்கானையும் வழங்கினோம்.

அல்குர்ஆன் 2 : 53

ஃபுர்கான் என்றால் அசத்தியத்தி­ருந்து சத்தியத்தை வேறுபடுத்திக் காட்டுவது என்று பொருள். வேதமும் சில இடங்களில் ஃபுர்கான் என்று கூறப்பட்டாலும் இங்கே கிதாபையும் ஃபுர்கானையும் என இரண்டு வழிகாட்டி நெறிகள் மூஸா நபிக்கு வழங்கப் பட்டதாகக் கூறப்படுகின்றது.

மூஸா நபியவர்களுக்கு வேறு வகையில் அருளப்பட்ட வஹீ தான் இங்கே ஃபுர்கான் என்று குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

! கிதாபையும் ஹிக்மத்தையும்

! கிதாபையும் ஹுக்மையும்

! கிதாபையும் இன்னொரு செய்தியையும்

! கிதாபையும் மீஸானையும்

! கிதாபையும் ஸுபுரையும்

! கிதாபையும் ஃபுர்கானையும்

என்றெல்லாம் கிதாபுடன் இன்னொரு செய்தி இணைத்துக் கூறப்பட்டிருக்கும் போது ஒன்றை ஏற்று மற்றதை மறுப்பது குர்ஆனையே மறுப்பதாகும் என்பதில் சந்தேகமில்லை.

! உம்மை விளக்குவதற்காகவே அனுப்பியுள்ளோம்.

! விளக்குவதற்காகவே தவிர உம்மை அனுப்பவில்லை.

! இவர் வசனங்களை ஓதிக் காட்டி, வேதத்தைக் கற்றுத் தருவார்.

! எந்தத் தூதருக்கும் அவரது தாய்மொழியிலேயே வேதத்தை அருளினோம். அவர் விளக்குவதற்காகவே இவ்வாறு செய்தோம்.

! அவர் பேசுவதெல்லாம் வஹீ தான்.

! இறைவனின் வஹீ மூன்று வகைகளில் உள்ளன.

! தூதர்கள் அனுப்பப் படுவதற்கான நோக்கம்.

! அவரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.

! தூதருக்கும் கட்டுப்படுங்கள்.

என்றெல்லாம் திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல சான்றுகளையும் ஆதாரங்களையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி ஹதீஸ்களைப் பின்பற்றுவது அவசியத்திலும் அவசியம் என்பதைச் சந்தேகமற நிரூபித்தோம்.

முடிவாகச் சொல்வதென்றால் நபிகள் நாயகத்தின் விளக்கமாக அமைந்துள்ள ஹிக்மத்தை, மீஸானை, ஃபுர்கானை அதாவது ஹதீஸை யார் நிராகரித்தாலும் அவர்கள் மறுப்பது குர்ஆனைத் தான் என்பதில் ஐயமே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய வழிகாட்டுதல் இன்றி வேறு வஹீ மூலம் நடைமுறைப் படுத்திய பல விஷயங்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அங்கீகாரம் செய்துள்ளான். நபியின் கட்டளை தனது கட்டளையே என ஏற்றுள்ளான்.

No comments:

Post a Comment