பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, February 9, 2010

அரசின் இலவச கல்வி உதவி தொகை

அரசின் இலவச கல்வி உதவி தொகை

பள்ளி படிப்பு

1. பள்ளி படிப்பிற்க்கு தமிழக அரசால் வழக்கப்படும் உதவித்தொகை, சீருடை, நோட்டு புத்தகம், காலனி அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றது (தனியார் பள்ளிகளுக்கு கிடையாது). இதை பெருவதில் சிரமம் இல்லை, இதில் கல்வி கட்டணத்தை தவிர அனைத்தும் தானகவே கிடைக்கின்றது. கல்வி உதவி தொகை விண்ணப்பித்தால் கிடைக்கும், அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் மிக மிக குறைவு( சில நூறு ரூபாய்கள்). எனவே (அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும்) பெற்றோர்கள் இதை பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. .

2. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக மத்திய அரசு ஒரு தகுதி தேர்வுவை (NET/NTSE/NMMS தேர்வுகள்) நடத்துகின்றது, இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் (பாஸ் பன்னினால் ) மட்டுமே உதவி தொகை கிடைக்கும். (8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) மாதம் 500 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள், மேலும் விபரம் அறிய நமது மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.

பட்ட படிப்பு

1. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ. 1000 வரை கிடைக்கும்.

2. பட்டபடிப்பை பொருத்தவரையில் தமிழக அரசு முஸ்லீம்களுக்கென்று தனியாக இதுவரை எந்த கல்வி உதவி தொகை திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை வழங்குகின்றது. படிப்பிற்க்கு தக்கவாறு ஒரு வருடத்திற்க்கு ரூ.1000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது இதை பெருவதும் அவ்வளவு சிரமம்மில்லை, ஒவ்வொறு கல்லூரியிலும் இதற்க்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படும், அதை வாங்கி பூர்த்தி செய்துகொடுத்தாலே போதும், பெரும்பாலும் நமது சமுதாயம் இதை பெற்றுகொள்கின்றது. இந்த கல்வி தொகை பெற தாஸில்தாரிடம் வருமான சான்றிதழ் பெற வேண்டும், வருமான சான்றிதழ் பெருவதற்க்கு அலுப்புபட்டு கொண்டு நமது சமுதாய மாணவர்களில் சிலர் இதை பெருவதில்லை.

3. மத்திய அரசு (தமிழக அரசுடன் இணைந்து) தொழில் கல்வி (ITI, Diploma, B.E/B.Tech, M.E/M.Tech) படிக்கும் சிறுபாண்மை (முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர்) மாணவர்களுக்காக சிறப்பான இலவச கல்வி உதவி தொகை திட்டத்தை அமல் படுத்தி வருகின்றது (வருடத்திற்க்கு ரூ.25,000 வரை). விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இது கிடைக்காது. (மேலும் விபரம் அறிய www.minorityaffairs.gov.in) ஒவ்வொறு வருடமும் அரசு குறிபிட்ட எண்ணிக்கையில் உதவியை வழங்குகின்றது. இந்த எண்ணிகை மிக மிக குறைவு, நாம் கணகிட்ட வரை 200 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில் இருக்கும். இதில் இன்னோறு சிக்கல் இதை பெருவதாக இருந்தால் மேலே குறிபிட்ட தமிழக அரசு உதவி தொகை பெறமுடியாது. இது யாருக்கு கிடைக்கும் என்றால் ஐஐடி, என்ஐடி மாணவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும், ஏனெனில் மத்திய அரசு இங்கு படிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றது. மேலும் ஐஐடி, என்ஐடியில் இதை பெருவதற்க்காக சிறப்பான ஏற்பாடும் செய்து வைத்துள்ளனர். ஆனால் கட்டாயம் ரூ.25,000 வரை உதவி தொகை கிடைக்கும் ஐஐடி, என்ஐடியில் முஸ்லீம் மாணவர்கள் மிக மிக குறைவு.

பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு கல்வி உதவி தொகை

1. மேலே குறிபிட்ட தமிழக அரசு செயல் படுத்தும் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை பட்ட மேற்படிப்பிற்க்கும் கிடைக்கும். படிப்பிற்க்கு தக்கவாறு ஒரு வருடத்திற்க்கு ரூ.2000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது.

2. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட மேற்படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் மாதம் ரூ. 2000 வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள்.

3. M.E/M.Tech படிக்க மத்திய அரசு (IIT) GATE என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.5000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது.

மேலே குறிபிட்ட நுழைவுதேர்வு பற்றிய விபரத்தை நமது மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.

முனைவர் படிப்பு (Phd) மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு

1. M.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசு CSIR -நுழைவு தேர்வு நடத்துகின்றது, இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.9000 வழங்குகின்றது.

2. மேலும் அராய்ச்சி படிப்புகளான உயிர் தொழிநுட்பம் (பயோ டெக்னாலஜி) உயிரில் (தாவரவியல், விலங்கியல் போன்ற வற்றில் உயர் கல்வி பயலும் மாணவர்களுக்கு இளநிலை விஞ்ஞானி தேர்வுகள் (DBT, JRF தேர்வுகள் ) ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தபடுகிறது. இது சம்பதமாக தகவல்களை நமது TNTJ மாணவரணியை தொடபு கொள்ளவும்.

2. சில நுழைவு தேர்வுகள் (GATE etc..) எழுதினால் பெரும்பாலும் உள்ள முனைவர் படிப்பிற்க்கு உதவிதொகை கிடைக்கும். முனைவர் படிப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஆய்வு செய்யும் பாடம், படிக்கும் பல்கலை கழகம் போன்ற தகவலுடன் நமது மணவரனியை தொடர்புகொண்டால் அவர்களுக்கு உதவி தொகை பெருவதற்க்கான வழிமுறைகளை விளக்குவோம்.

வெளி நாட்டு படிப்பிற்க்கான உதவி தொகை

அமெரிக்காவில் உதவி தொகை பெற

GRE , TOEFL என்ற இரண்டு தேர்வுகள் உள்ளது. இதை எழுத ரூ.18,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி). இதில நல்ல மதிப்பெண் எடுத்தால் அமெரிக்க பல்கலைகழகங்கள் மாதம் ரூ.80,000 வரை உதவி தொகை வழங்குகின்றது. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, உதவி தொகை பெற்று, நல்ல பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தாலும் அமெரிக்கா விசா வாங்குவது மிக மிக கடினம்.

இங்கிலாந்தில் உதவி தொகை பெற

IELTS- என்ற தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் இங்கிலாந்து பல்கலைகழகங்கள் மாதம் ரூ.60,000 வரை உதவி தொகை வழங்குகின்றது. இதை எழுத ரூ.10,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி).

பிற நாடுகள் : மேலே குறிபிட்ட மூன்று நுழைவுதேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பிற நாடுகளில் உள்ள பல்கலைகழகங்கள் உதவி தொகை வழங்குகின்றன.

பிற கல்வி உதவிகள்

அரசு செய்யும் உதவி தொகைகளைகளை தவிர சில கல்லூரிகள், அவர்களுடைய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக தனி தனியாக உதவி தொகை வழங்குகின்றது. அது கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும். (உதாரணத்திற்க்கு சென்னை புது கல்லுரியில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம், ஐஐடி-யில் அங்கு பயிலும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம் , etc…..)

நாம் மேலே குறிபிட்டது போக மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது சில கல்வி உதவிதொகை திட்டத்தை அறிவிக்கும், அவற்றை பற்றி அரசு அறிவிப்பு வெளியகும் போது நமது ஊடங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

அரசின் இலவச கல்வி திட்டமும் முஸ்லீம்களின் நிலையும்

1. மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச கல்வி உதவி தொகை மிக மிக குறைவாக உள்ளது, இதனால் நமது சமுதாயம் அதை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

2. அதிக பணம் கிடைக்கும் கல்வி உதவி தொகை பெற நுழைவு/தகுதி தேர்வுகள் உள்ளன. இந்த தேர்வுகளெள்ளாம் கடினம் என நமது சமுதாய மாணவர்கள் நினைப்பதினால், இதை எழுதி தேர்ச்சி பெரும் நிலையில் நமது சமுதாயம் இல்லை, இதனால் பெரும்பாலான இலவச கல்வி உதவி தொகை வீணகின்றது.

3. நுழைவு/தகுதி தேர்வு இல்லாமல் கிடைக்கும் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வாங்கி, சான்றிதழ் பெற்று பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் நமது சமுதாயம் இதில் அதிக அக்கரை காட்டுவதில்லை. காரணம் பெரும்பாலானவர்கள் இதை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர், அரசு நிறுவங்களுக்கு சென்று பழக்கம் இல்லாதவர்களாக இருக்கின்றனர், பெரும்பாலான மாணவர்களின் தந்தைகள் வெளி நாட்டில் இருப்பதால் பெண்களே இந்த வேலையை செய்ய வேண்டி உள்ளது, அல்லது அடுத்த ஆண்களின் துனையை நாட வேண்டி உள்ளது இதனாலேயே பலர் அரசிடம் இருந்துகிடைக்கும் சிறிய அளவிளான கல்வி தொகையையும் பெருவதற்க்கு முயற்சிப்பதில்லை.

தீர்வு என்ன?

தமிழகத்தில் லட்சக்காணக்கான முஸ்லீம் மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர், அனைவருக்கும் நாமே நேரடியாக சென்று கல்வி உதவி வாங்கி தருவது என்பது நடைமுறை சாத்தியமில்லை, எனவே நமது முஸ்லீம் சமுதாயத்திற்க்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு அரசிடம் இருந்து கல்வி உதவி பெருவது என்பதை விளக்க வேண்டும், அவர்களே தானாக சென்று கல்வி உதவி பெரும் நிலையை ஏற்படுத்த வேண்டும், இதைதான் தற்போது TNTJ மாணவரணி செய்து கொண்டு இருக்கின்றது,

கல்வி உதவி பெறுவது சம்மந்தமான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு விளக்கும் வண்ணம் இதுவரை தமிழகத்தில் 130 இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி மக்களுக்கு தெளிவு படுத்தி உள்ளோம். இருந்தும் இந்த விஷயத்தில் மக்கள் நம்மை பயன்படுத்திகொள்வது குறைவாகவே உள்ளது. இருந்தாலும் நமது பணியை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கின்றோம் (பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்யவும்). கல்வி உதவி சம்மந்தமான அனைத்து தகவலையும் தொடர்ந்து நமது ஊடகத்தில் (உணர்வு வார இதழ், www.tntj.net இணையதளம்) வெளியிட்டுகொண்டு இருக்கின்றோம். நம்மை தொடர்புகொள்பவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நம்மால் இயன்றவரை தந்துகொண்டு இருக்கின்றோம்.

அரசு வழங்கிவருவதாக சொல்லும் வட்டியில்லா கடன் திட்டம் சிக்கல் இல்லாமல் நடைமுறையில் கிடைக்கப்பெற்றால் நிச்சயம் இந்த சமூகம் கல்வியில் முன்னேறும். ஆனால் இந்த வட்டியில் கடன் திட்டம் நடைமுறையில் இருப்பதாக அரசு சொன்னாலும் முஸ்லீம் மாணவர்களுக்கு அது எட்டா கனியாகவே உள்ளது.

ஆக்கம்

S.சித்தீக்.M.Tech


கல்வி உதவி சம்மதமான முக்கியமான இணைய தளங்கள்

தமிழக அரசின் தேர்வுகளுக்குகான இணையம்
www.dge.tn.gov.in/

தேசிய திறன் தேர்வு இணையம்
www.ncert.nic.in

மத்திய அரசின் சிறுபாண்மை நலதுறை
www.minorityaffairs.gov.in

கல்வி உதவிக்கான மத்திய அரசின் இணையதளம்
www.educationsupport.nic.in

பிற கல்வி உதவி சம்மந்தமான தகவல் பெற
www.scholarshipsinindia.com

மேலும் கீழ்க்கானும் தமிழக அரசின் அமைப்புகள் கல்வி உதவி , இலவச பயிற்சி போன்றவற்றை சிறுபாண்மை மாணவர்களுக்கு அளித்து வருகின்றன.

1.சிறுபாண்மையினர் நல இயக்கம்
எண்:807, அண்ணாசலை, சென்னை-600002

2.தமிழ்நாடு சிறுபாண்மையினர் பொருளாதரா வளர்ச்சி கழகம்
எண்:807, அண்ணாசாலை, 5வது மாடி, சென்னை-600002

No comments:

Post a Comment